Headlines

சீருடை வவுச்சர்! ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை சீருடைக்குப் பதிலாக வழங்கப்பட்டுள்ள பண வவுச்சர் முறைமையை நீக்கிவிடுமாறு தெரிவித்து ஆசிரியர், அதிபர் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு முன்னணி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதில், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவை சங்கம், பொது ஆசிரியர் தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம், அகில இலங்கை அதிபர் சேவை சங்கம், முதலாம் தர அதிபர்களின் சங்கம் மற்றும் அதிபர் சேவை…

Read More

இலங்கை – மாலைதீவிற்கு இடையிலான உறவு விருத்தி குறித்து பேச்சு

இலங்கையுடன் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள ராஜதந்திர முறுகலை தீர்த்துக்கொள்ளும் வகையில் உயர்மட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. மாலைதீவின் வெளியுறவு அமைச்சர் தஹன்யா மயூமூன் நேற்று (9) இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து உரையாடியுள்ளார். முன்னதாக அவர் கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார். இந்தநிலையில் குறித்த சந்திப்புக்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று மாலைத்தீவு அமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மாலைத்தீவில் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவர் உட்பட்ட இரண்டு இலங்கையர்கள்…

Read More

தாஜுதீன் தீர்ப்பு இன்று..

யோஷித்த ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான CSN தொலைக்காட்சியில் நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றிய, அவரது முன்னாள் காதலி என அறியப்படும் யஷாரா அபேநாயக்கா நிதி மோசடி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் வாக்குமூலமொன்றை அளித்துள்ளார். அத்துடன், நேற்றைய தினமே குறுஞ்செய்தியொன்றின் (SMS) மூலம் யஷாரா நடந்த விடயங்களை நாமல் ராஜபக்‌ஷவுக்கு தெரிவித்துள்ளார். நிதி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவில் தான் உண்மைகள் அனைத்தையும் தெரிவித்ததாகவும், அவர்கள் CSN பணிப்பாளர்களை விசாரணைக்கு அழைப்பார்கள் என்றும், அனைவருக்கும் உள்ளே செல்வதற்கு தயாராக இருக்கும்படியும்…

Read More

(ஹோமாகம) பாடசாலை உட்கட்டமைப்பை பார்வை

ஹோமாகமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாடசாலையின் அமைப்புப் பணிகளை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தனவின் அழைப்பின் பேரில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சென்றார். அமைச்சராக இருந்தபோது பந்துல குணவர்தன அவர்கள் இந்த பாடசாலையினை இங்கு உருவாக்கினார்.இந்த பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறியவருமாறு,இவ்வாறான அமைப்பு ரீதியான பாடசாலைகளை கிராமப் புறங்களிலும் உருவாக்குவதன் அவசியத்தை முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இதன் போது விளக்கமளித்தார்.

Read More

சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி!

கொழும்பு – கிரான்பாஸ், மாதம்பிடிய பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 57 வயதுடைய பெண் ஒருவரே  உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

புற்றுநோயை தடுக்க புதிய மாத்திரை

மாமிச உணவுகளை உட்கொள்வதை விடுத்து பச்சை காய்கறிகளை உட்கொள்வதனால் உயிர்கொல்லி நோயான புற்றுநோயை தடுக்க முடியும் என தற்போது அமெரிக்க ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட 38 பேரை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் பச்சை தாவரங்களினால் உருவாக்கிய சல்ஃபரோபேன் (Sulforaphane) எனும் கலவைக்கு புற்றுநோயை எதிர்க்கக்கூடிய சக்தி இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். ப்ரோக்கோலி தாவரத்தின் முளைகளில் இருந்து சல்ஃபரோபேன்  பெற்றுக்கொள்ளப்படுகின்றது என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read More

பொதுவான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவோம்

– ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம் –  அரச ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை இரத்து   செய்வதற்கோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலோ எதுவிதமான  தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லையென இன்று  சபையில் உறுதியளித்த  பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க எதிர்காலத்தில்  அரச தனியார் துறையினருக்கு பொதுவான  ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட  உரையொன்றை ஆற்றும்- போதே பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

Read More

வடக்கு புகையிரத பாதைகளில் குறைபாடுகள்: கொடுப்பனவுகள் இடைநிறுத்தம்

– ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம் – வடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சு பாரிய கடன் சுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை எவ்வாறு செலுத்த போகின்றோம் என்ற சவால்களுடன் பயணத்தை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார். இன்று புதன்கிழமை பாராளுமன்றில் கடற்றொழில் நீர்வளத்துறை போக்குவரத்து சிவில் விமான மற்றும் கப்பற்துறை அமைச்சர்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு…

Read More

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்

பரீட்சை எழுதும்  மாணவர்களின் நன்மை கருதி தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின்  தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான  அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை  பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு  நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர்  மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு  தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடும்போது போக்குவரத்து பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வரவு செலவுத்…

Read More

அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவீட்டு ஆய்வகம்

தெற்காசியாவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய அளவீட்டு ஆய்வகம் ஹோமாகமயில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீனினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உற்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக மஹ்றூப் MP நியமனம்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். மஹ்றூப் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அயராத முயற்சியினாலேயே ஏ.எம்.மஹ்றூப் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீனால் இன்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக்…

Read More

இணைய வழி முறைப்பாடு விரைவில்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில், இணையத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய தெளிவின்மையால் இது தொடர்பாக முறைப்பாடுகளை தெரிவிக்க மக்கள் பின்னிற்பதாகவும் தெரிவித்துள்ள ஆணைக்குழு இதனால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இணையத்தின் ஊடாக முறைப்பாட்டினை தெரிவிக்கும் செயல்திட்டமானது நடைமுறைப்படுத்தும் வரை பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 1954 என்ற…

Read More