Headlines

றிஷாத் கொஞ்சம் தாமதித்து செல்லுங்கள்! மைத்திரியின் இரண்டாவது சந்திப்பு!!

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிக்கும் அமைச்சர் றிஷாதுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒக்டோபர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில், அரசு மாற்றான்தாய் மனப்பாங்கோடு செயற்படுவதாக கடும் தொணியில் ஆக்ரோசமாக றிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியிருந்தார். இதன் பிற்பாடு ஜனாதிபதி மைத்திரியின் விசேட வேண்டுகோளுக்கு அமைய றிஷாத் பதியுதீனுடனான நேற்றைய சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல்…

Read More

ஐந்து பிள்ளைகளால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்

– செல்வராஜர் – 80 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்து இருந்த கொடூர சம்பவமொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மொனராகல, சியம்பலாண்டுவ பகுதியில் தாய் தந்தை, இரு மகன்மார்கள், 3 மகள்மார்கள் உட்பட 7 பேர் கொண்ட குடும்பமொன்று வசித்து வந்துள்ளது. 80 வயதுடைய தாயின் பெயரிலே அனைத்து சொத்துகளும் இருந்துள்ளன. இந்நிலையில் இவருடைய கணவன் 28 வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். இதன் பின்னர் தாயின்…

Read More

சோபித தேரரின் இறுதி கிரியைகள் : நேரடி ஒளிபரப்பு

மறைந்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு ­வாவே சோபித தேரரின் இறுதிக்கிரி­யைகள் பூரண அரச மரி­யா­தை­யுடன் தற்போது பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன.

Read More

நாகவிஹாரையிலிருந்து கண்ணீர் வெள்ளத்துடன் பயணிக்கும் மாதுலுவாவே

இறையடி எய்திய மாதுலுவாவே சோபித்த தேரரின் தேகம், கோட்டே ஸ்ரீ நாகவிஹாரையிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்களின் துயர கண்ணீருடன் அன்னாரை சுமந்த பேழை விஹாரையிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாகவிஹாரைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்னாரது தேகம், பாராளுமன்ற கட்டட மைதானத்தை நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றது.

Read More

ஆங் சான் சூகி அதிபர் பதவி ஏற்பதில் சிக்கல்

மியான்மரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா, வங்காள தேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடு மியான்மர். முன்பு இது பர்மா என்று அழைக்கப்பட்டது. பர்மீஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். சீனர்கள் 3 சதவீதம் பேரும், இந்தியர்கள் 2 சதவீதம் பேரும் வசிக்கிறார்கள். 2014 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு மொத்த மக்கள் தொகை 5 கோடியே 14 லட்சத்து 86 ஆயிரம் பேர் ஆகும். ஆங்கிலேயர்களின்…

Read More

பாலஸ்தீனில் யாசர் அராபத் இல்லம் அருங்காட்சியகம் ஆகிறது

முன்னாள் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கடந்த 2004-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை தொடர்ந்து அவரது பத்தா கட்சியை சேர்ந்த மகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால், அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர் கடுமையாக சண்டையிட்டு, காசா பகுதியை கடந்த 2007-ம் ஆண்டு கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, யாசர் அரபாத், ரமல்லா நகரில் வாழ்ந்து வந்த இல்லம் மூடப்பட்டு கிடக்கிறது. அந்த இல்லத்தில் யாசர் அராபத் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக, அந்த இல்லத்தை…

Read More

மராட்டியத்தில் சாக்லேட் என்று நினைத்து பட்டாசை தின்ற சிறுமி சாவு

மராட்டிய மாநிலம் ரத்னகிரி அருகே உள்ள திசாங்கி கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. நேற்று காலை அந்த கிராமத்தின் மைதானப் பகுதியில் வெடிக்காத பட்டாசுகளை சிலர் போட்டு விட்டு சென்றிருந்தனர். நேற்று மதியம் அந்த மைதானத்தில் சிறுவர்– சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது தாமினி என்ற 5 வயது சிறுமி வெடிக்காமல் வீசப்பட்டு கிடந்த பட்டாசுகளை பார்த்தாள். அந்த பட்டாசு பார்சல் அவளுக்கு சாக்லேட் மாதிரி தெரிந்துள்ளது. யாரிடமும் சொல்லாமல் அவள் மூன்று பட்டாசுகளை எடுத்து…

Read More

வங்கக்கடலில் காற்றழுத்தம்! இலங்கைக்கு வெள்ள ஆபத்து

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று,  இலங்கை மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும். இந்த காற்றழுத்தம் காரணமாக இலங்கை முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின்…

Read More

மொனராகலையில் குளமொன்று உடைப்பெடுத்தது! பொதுமக்கள் அவசரகதியில் வெளியேற்றம்

மொனராகலையில் கடும் மழை காரணமாக குளமொன்று உடைப்பெடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் அப்பிரதேசத்திலிருந்து அவசர கதியில் வெளியேற்றப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொனராகலை மாவட்டமும் ஒன்றாகும். கடும் மழைகாரணமாக இங்குள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள மடுல்லை பிரதேசத்தை அண்மித்த உடுமுல்லை கிராமத்தின் அருகில் அமைந்திருந்த குளத்தின் அணைக்கட்டு நேற்றிரவு உடைப்பெடுத்துள்ளது. அதனை அண்டிய பிரதேசங்கள் எங்கும் தற்போது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு…

Read More

வட முஸ்லிம்களின் மீள்குடியுயேற்றம் ; ஜனாதிபதி பணிப்புரை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியுயேற்றம் மற்றும் அதற்கான தடைகளை அகற்றுதல் தொடர்பில் ஆராய அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் குழுவொன்றினை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி இரு வாரங்களுக்குள் இக் குழு போதுமான கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் மூன்று வாரங்களுக்குள் முழுமையான அறிக்கையுடன் தன்னை சந்திக்குமாறு பணிப்புரைவிடுத்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி அமைச்சரவையிலும்,அதற்கு முன்னர் பாராளுமன்றத்திலும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அரச இயந்திரத்தினது பார்வை போதுமானதாக இல்லை என்பதை கடும் வேதனையுடன் வெளிப்படுத்தியிருந்தார்….

Read More

இலவசச் சீருடைத் திட்டத்தில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்குப் பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம். பந்துசேன தெரிவித்தார். எனினும் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான மேலதிக செயற்பாடுகள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனூடாக…

Read More

கடவுச்சீட்டு பிரச்சினையில் சிக்கிய துமிந்த சில்வா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டில் கடந்த செவ்வாய்கிழமை சிங்கப்பூர் செல்ல முயற்சித்த போதிலும், அந்த கடவுச்சீட்டில் செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஈகே 348 விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்கு அவர் கடந்த செவ்வாய்கிழமை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். எனினும் அவரை செல்ல அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் அவர் நேற்று சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டில் சிங்கப்பூர் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Read More