Headlines

மெகா சீரியல் (Poem)

கிழவியும் குமரியும் கிறுக்குத் தனமாய் பல பல நாடகம் பார்த்து ரசிக்கிறார். சேரியில் வாழும் சின்ன வீட்டிலும் சீரியல் பார்க்க LCD உண்டு. நாடகம் சொல்லும் நாறிய கருத்தால் கோடு ஏறிய குடும்பங்கள் எத்தனை? அடுத்தவன் மனைவிக்கு ஆட்டையை போடல் உடுத்த உடுப்புடன் ஓடிப் போதல் கொடுத்து உதவி குழியைத் தோண்டல் மருமகள் வாழ்வை மாமியார் கெடுத்தல் அருமையாய் பேசி ஆம்பிளையை கவிழ்த்தல் உரிமையைப் பேசி உம்மாவைப் பிரித்தல் தரித்திர நாடகத் தாக்கங்கள் ஆயிரம் இரண்டு வரிகளில்…

Read More

கெக்கிராவையில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி

– விஷேட செய்தியாளர் – அனுராதபுரம், கெக்கிராவையில் சற்று முன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கெக்கிராவை தனியார் வங்கி ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த வெடிப்பில் ஸ்தலத்திலேயே இரண்டு பேர் பலியாகியுள்ளனர். தனியார் வங்கியில் கொள்ளையிட வந்தவர்களாலேயே குண்டு வெடிக்க வைக்கப் பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவி பிரமாணம்

சிறைச்சாலைகள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். அத்துடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவி பிரமாணம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக கடமையாற்றிய திலக் மாரபன்ன நேற்று முன்தினம் பதவி விலகிய நிலையிலேயே, இந்த அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மது போதையில்  வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார  திலங்க ஜெயலால் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மாத்திரம் 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை மது போதையில் வாகனம் செலுத்திய 92 பேரை நீதி மன்றத்தில்…

Read More

மிதிபலகையில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

புகையிரதத்தின் மிதிபலகையில் பயணம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார். டிசம்பர் 01 ஆம் திகதி முதல் இந்நடவடிக்கையை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாகவும் புகையிரதம் பயணிக்கும் வேளைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

தேசிய அடையாள அட்டை 12 இலக்கங்களை கொண்டதாக மாற்றம்

1972ம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையானது 9 இலக்கங்களும் ஆங்கில எழுத்துக்களான V மற்றும் X காணப்பட்டது. தேசிய அடையாள அட்டை தொடர்பாக தற்பொழுது அதிக அவதானம் செலுத்தப்படுவதால் அதனை புதுப்பித்து 12 இலக்கங்களை உள்ளடக்கியதாக காணப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

தாக்குதல்களின் போதும் சளைக்காதவர் சோபித தேரர்: மஹிந்த

நல்லாட்சியையும் சகவாழ்வையும் இலக்காக கொண்டு போராடி இன்னுயிர் நீத்த கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரருக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாதுலுவாவே சோபித தேரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். கடந்த காலங்களில் மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த வீரரின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு என அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது குறிபபிட்டார்….

Read More

நாகதீபத்தின் பெயரை மாற்ற முடியாது! பைஸர் முஸ்தபா மறுப்பு

யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு உட்பட்ட நாகதீபம் என்ற தீவின் பெயரை மாற்றுவதற்கு முடியாது என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி வடமாகண சபை அமர்வின் போது பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

Read More

ஜாகிர் நாயக் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்ற ஜப்பானியர்கள்

கடந்த சனிக்கிழமை ஜப்பானில் இடம் பெற்ற இஸ்லாமிய விளக்கக் கூட்டம். ஜாகிர் நாயக் அவர்களால் பல தெளிவுகளை அடைந்த ஜப்பானியரில் பலர் அரங்கத்திலேயே இஸ்லாத்தை தழுவிக் கொண்டனர். ஐந்து லட்சம் தருகிறோம் என்று சொல்லவில்லை. வாளைக் காட்டி மிரட்டவில்லை. ஒரு மார்க்கம் வளர்வதற்கு மக்களை சிந்திக்க தூண்ட வேண்டும். சிந்திக்கும் மக்கள் தாங்களாகவே இந்த மார்க்கத்தில் நுழைவார்கள்.

Read More

குமார் குணரட்னம் கைது தொடர்பில் பிரதமருக்குக் கடிதம்

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழுத் தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அக்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறும் கோராப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக்கவின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில், உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே கடந்த காலங்களில்…

Read More

க.பொ.த. (சா/த) பரீட்சை 664,537 பேர் விண்ணப்பம்

எதிர்­வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள கல்விப் பொதுத் ­த­ரா­தர (சாதா­ரண தரப்) பரீட்­சைக்கு ஆறு இலட்­சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்­ப­கு­மார தெரி­வித்தார். இவர்களுள் நான்கு இலட்­சத்து 3 ஆயிரத்து 442 பேர் பாட­சாலை விண்­ணப்­ப­தா­ரிகள் எனவும் இரண்டு இலட்­சத்து 60 ஆயிரத்து 895 பேர் தனியார் பரீட்­சார்த்­திகள் எனவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் மேலும் தெரி­வித்தார். இம்­முறை 4,670 பரீட்சை மத்­திய நிலை­யங்களை அமைக்க எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ள­தோடு கடந்த வருடம்…

Read More

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி

உள்ளூரில் உற்பத்திசெய்யக்கூடிய உண வுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மான தொகை செலவாகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படவேண்டும். இதன் பொரு ட்டு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இவ் விடங்கள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக் குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும்…

Read More