Headlines

இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் சிறுவன்: மீட்டுதர தாயார் வேண்டுகோள்

பாகிஸ்தானின் கராச்சி அருகே உள்ள ஒரங்கி என்ற பகுதியை சேர்ந்த ரசியா பேகம் என்பவரின் 15 வயது மகனான முகமது ரமசான், கடந்த 2008-ம் ஆண்டு வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் தற்போது போபாலில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார். ரமசான் இந்தியாவில் இருப்பதை சமீபத்தில் கண்டறிந்த ரசியா பேகம், தனது மகனை பாகிஸ்தானுக்கு திரும்ப வைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை. மேலும் ரமசானிடம் போதுமான…

Read More

இலங்கையில் இஸ்ரேல்: அமைச்சர் பௌசி அதிரடி

இலங்­கை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட இஸ்­ரே­லுக்கு இலங்கை அர­சாங்கம் மீண்டும் இட­ம­ளிக்க முயற்­சிக்­கின்­ற­மை­யினால் முஸ்­லிம்கள் அரசின் மீது அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ளனர். அவ்­வா­றான நிலைமை உரு­வானால் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முஸ்­லிம்கள் ஐ..தே க. கட்­சி­யையும் ஸ்ரீ.ல.சு. கட்­சி­யையும் புறந்­தள்ளி விட்டு ஜே.வி.பி. க்கே வாக்­க­ளிப்­பார்கள் என தேசிய ஒரு­மைப்­பாட்டு இரா­ஜாங்க அமைச்­சரும் ஸ்ரீ.ல. சு. கட்­சியின் முஸ்லிம் பிரிவின் தலை­வ­ரு­மான ஏ.எச்.எம். பௌசி தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் இது பற்றி இலங்கை முன்னணி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எமது நாட்டின்…

Read More

மக்களுக்கு சுமையில்லாத வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்

அடிப்படையான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் மீது சுமையை செலுத்தாத வகையில் அந்த வரவு செலவுத்திட்டம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று குறிப்பிட்டுள்ளார். கொழும்பு – கிங்ஸ்பேரி நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 15ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித்…

Read More

“வீடுகளை உடனடியாக கட்டித் தா” : மீரியபெத்தை மக்கள் ஆர்ப்பாட்டம்

பதுளை மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டித்தர வேண்டும் என கோரி இன்று பண்டாரவளையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மண்சரிவு இடம்பெற்று ஒருவருடம் முடிவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பூனாகலையில் உள்ள 200 வருட பழமையான தொழிற்சாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு மூன்று மாதத்தில் வீடுகள் கட்டித் தருவதாக அரசியல் வாதிகள் வாக்களித்த போதும் ஒரு வருடம் நிறைவடைந்து வீடுகள் கட்டித் தரவில்லை. மக்கள்தெனிய என்ற இடத்தில் புதிதாக வீடுகள் கட்டப்படுகின்ற போதும்…

Read More

சேயா செதவ்மி படுகொலை : சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை தொடர்ந்தும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மினுவாங்கொடை  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

வீட்டு தொகுதிகள்  மற்றும் பள்ளிவாயல் திறந்து வைப்பு

முசலி – கொண்டச்சி கிராமத்தில் கட்டார் செம்பிறை சங்கத்தின் நிதியுதவினால் இலங்கை ஐமாதே இஸ்லாமியின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 60வீடுகள், கடைதொகுதி, பள்ளிவாசல், தண்ணீர் தொகுதி மற்றும் கல்வி கூடம் ஆகியவற்றை இன்று அமைச்சர் றிஷாத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கட்டார் செம்பிறை சங்க உறுப்பினர்கள். இலங்கை ஐமாதே இஸ்லாமியின் வெளிவிக்கார பணிப்பாளர் மொளலவி அப்துர் றஹ்மான், ஊர்மக்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

கடந்த 29ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து  இன்று திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் மாணவர்களால்  கண்டன பேரணி நடத்தப்பட்டது. திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30.மணியளவில்ஆரம்பித்த  குறித்த பேரணியானது, டொக்கையார்ட் வீதி ஊடாக தபால் நிலைய வீதியை அடைந்து தொடர்ந்து உட்துறைமுக வீதி ஊடாக ஆளுனர் செயலகத்தினை வந்தடைந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆளுனரிடம் மாணவர்கள் கையளித்தனர். பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: வட மாகாணசபை பங்கெடுக்க வேண்டும்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதிலும், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும் என்று தமிழ் முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கான அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கலந்துரையாடலில் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கின்றது. இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு என்ன வகையிலான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து ஆராயப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர்…

Read More

சந்திரனில் கடல் : நாசா அதிர்ச்சி

சனிகிரகத்தின் சந்திரனில் கடல் இருப்பதை நாசா விண்கலம் கண்டு பிடித்துள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கு அனுப்பிய ‘காசினி” என்ற விண்கலம் கிரகங்களையும், அவற்றின் சந்திரன்களையும் கண்டு பிடித்து படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சனிகிரகத்தின் ‘என்சி லாடஸ்” என்ற சந்திரனின் மிக அருகில் அதாவது 30 கி.மீட்டர் தொலைவில் தென்முனையில் சந்திரனின் அடிப்பகுதியில் உறைந்த நிலையில் நீராவி மற்றும் பல மூலக்கூறுகள் இருப்பதை படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 2005…

Read More

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது :கோத்தபாய

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனுடன் தாம் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள்

– ஜவ்பர்கான் – எந்தவொரு பெற்றாரும் தமது பிள்ளைகளுக்கு நஞ்சூட்ட விரும்பமாட்டார்கள். ஆனால் மறைமுகமாக பெற்றோர்கள் நஞ்சுகலந்த, இராசாயன பசளையுடன் தயாரிக்கப்பட்ட நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள். இதனால் பலர் நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா தெரிவித்தார். காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டுத்தோட்ட வயல் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி விவசாய போதனாசிரியை குந்தகை ரவிசங்கரின்…

Read More