Headlines

7 வயது வரை பன்றி தொழுவத்தில் வாழ்ந்த சீன சிறுவன் மீட்பு

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள புயாங் நகரத்தில் 7 வயது வரை பன்றி தொழுவத்தில் வாழ்ந்து வந்த சிறுவன் மீட்கப்பட்டான். அந்த சிறுவனின் பெயர் ஹோங்போ என்று தெரிய வந்துள்ளது. இந்த சிறுவனின் தந்தை பன்றி பண்ணை வைத்துள்ளார். தாய் மனநிலம் பாதித்தவர். இதனால் இந்த குடும்பம் தனித்து வாழ்ந்து வந்தது. தாய் மனநிலை பாதித்த பெண் என்பதால் பிறந்த குழந்தையை அவனது தந்தை பன்றி தொழுவத்தில் வைத்தே வளர்த்துள்ளார். இந்த செய்தி தினசரி பத்திரிகையில்…

Read More

பிறந்தநாள் கேக்கை அனுமதியின்றி சாப்பிட்ட சிறுவனை அடித்துக் கொன்ற கொடூரம்

மேரிலாந்தில் அனுமதியின்றி பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 9 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடமேற்கு வாஷிங்டனுக்கு அருகில் ஹாகர்ஸ்டவுன் என்ற பகுதியில் வசிக்கும், ஜாக் கிரேசியா என்ற சிறுவன், சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த பிறந்தநாள் கேக்கை திருட்டுத்தனமாக சாப்பிட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவனது தாயின் ஆண் நண்பர் ராபர்ட் வில்சன் (30), ஜாக்கை கைவிலங்கிட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதுபற்றி அச்சிறுவனின், தாயாரின் தம்பி கொடுத்த புகாரின் பேரில்,…

Read More

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள்

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார். புகைப்படங்களை போலியான முறையில் பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக அநேகமானவர்கள் முறைப்பாடு செய்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றமையே இந்தப் பிரச்சினைக்கான காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக…

Read More

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைப்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப் பத்திரங்கள் கிடைத்தவுடன் அவற்றை பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சார்த்திகளின் நலன் கருதி உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் புதிதாக மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடப் பிரிவு. மற்றும் பரீட்சை நிலைய…

Read More

சோபித தேரர் விரக்தி!

சமகால அரசியல் நிலவரங்களால் விரக்தியடைந்துள்ளமையால் அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விழிப்புணர்வு செய்தேன். நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பினை தொடங்கி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கு வரையில் நடத்தி வந்தேன். நான் எதிர்பார்த்த தேசிய அளவிலான முக்கிய செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமையினால் விரக்தியடைந்துள்ளேன்….

Read More

ரமழான் நோன்பினால் கவரபட்டு; இஸ்லாத்தில் இணைந்த இளைஞன்

சையது அலி பைஜி ரமழான் நோன்பின் அமைப்பினால் கவரபட்டு தன்னை .இஸ்லாத்தில் இணைத்து கொண்ட உக்ரைன் நாட்டு ஆய்வாளர் ஆர்த்தர். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பின் அமைப்பினால் கவரபட்டு உக்ரைன் நாட்டை சார்ந்த ஆர்த்தர் என்ற இளைஞர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் இது பற்றி அவர் கூறும்போது நான் பல்வேறு மதங்களை பற்றி ஆய்வு செய்தேன். நான் ஆய்வுக்கு எடுத்து கொண்ட மதங்களில் இஸ்லாமும் ஒன்றாக இருந்தது. இஸ்லாத்தின் பல்வேறு வழிகாட்டுதல்களை இஸ்லாம் அல்லாத…

Read More

உக்ரைனில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது!

ரமழான் மாதமானது, உக்கரைன் நாட்டை பொறுத்தவரை இஸ்லாத்தை தழுவும் மாதமாக மாறியுள்ளது. ரமழான் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரையிலும் 50 க்கும் அதிகமான மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் இணைந்ததாக உக்ரைன் இஸ்லாமிய மையத்தின் பொறுப்பாளர் இஸ்மாயில் தெரிவித்தார். 50 பேர் இஸ்லாத்தை தழுவியது என்பது நான் நிறுவகிக்கும் ஒரு இஸ்லாமிய மையத்தின் மூலம் கிடைத்துள்ள விபரமாகும் இது போன்று பல மையங்கள் உக்ரைனில் செயல் பட்டு வருகிறது. அதுபோல் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக இஸ்லாத்தை பிரகடனம் செய்பவர்கள்…

Read More

வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதோர் விண்ணப்பிக்கலாம்: ஆட்பதிவு ஆணையாளர்

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 01 ஆம் திகதியளவில் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க பிரதேச செயலாளர் அலுவலகங்கள் செயற்பட வேண்டுமென திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார். புதிதாக அடையாள அட்டை பெற 10,000 பேரே விண்ணப்பித்துள்ளனர். இதில் 9,000 பேருக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விட்டன. ஏனையவை…

Read More

மட்டக்களப்பில் ஐந்து தினங்களுக்கு மின்வெட்டு

அப்துல்லாஹ் மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மட்டக்களப்பில் மின்வெட்டு புதன்கிழமை தொடக்கம் ஐந்து தினங்களுக்கு மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். தினமும் காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஐந்து வரை இந்த மின்வெட்டு பின்வரும் மின் பாவினையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருக்கும். புதன்கிழமை 09.07.2015– களுவாஞ்சிகுடி மின் பாவினையாளர் சேவை நிலைய அம்பிளாந்துறைப் பகுதி. வியாழக்கிழமை 10.07.2015- களுவாஞ்சிகுடி நகர மின் பாவினையாளர்…

Read More

இராமேஸ்வரம் – தலைமன்னார் ரயில் இணைப்பு குறித்து பேச்சு

இராமேஸ்வரம் – தலைமன்னாருக்கு இடையில் ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தான் முன்மொழிந்துள்ளதாக பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஏற்றுமதி மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பில் தான் கலந்து பேசியதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான சிறுதூர படகு சேவைகள் 1966ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது. தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான கடற்பரப்பில் இலங்கையின் எல்லை தூரம் சுமார்…

Read More

கிரீஸ் நட்டு வங்கிகளில் பணமில்லை!

கிரீஸ் நாட்டில் நேற்று முன்தினம் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஐரோப்பிய நாடுகளின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என 61.31 சதவீதம் பேர் வாக்களித்தனர். சிக்கன திட்டத்துக்கு ஆதரவாக 38.69 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர். சிக்கன நடவடிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் ஆதரவாளர்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கிரீஸ் நாட்டின் பண நெருக்கடி தீரவில்லை. ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக மெஜாரிட்டியான மக்கள்…

Read More

டி.வி. தொடரில் பணிபுரியும் அதிபர் ஒபாமா மகள்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார். எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது. அதில் அவர் கதை வசனம் மற்றும் டைரக்ஷன் துறையில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அதன் பிறகு டி.வி. அல்லது சினிமா துறையில் நுழைய மலியா முடிவு செய்துள்ளார். அதிபர் மகள் என்பதால்…

Read More