Headlines

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக 7000 முறைபாடுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் 600 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதனால் குறித்த முறைபாடுகள் தொடர்பில் விரைவான விசாரணைகள் மேற்கொள்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தின் போது பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் வேறு சம்பவங்கள் தொடர்பில் முறைபாடுகள்…

Read More

21 வயது பலஸ்தின முஸ்லிம் பெண் மருத்துவர், உலக சாதனை!

உலகில் 21 வயதில் மருத்துவரான முதல்பெண்மணி பலஸ்தினத்தை சேர்ந்த சகோதரி இக்பால் ஆசாத். உலகில் இதுவரை யாரும் 21 வயதில் மருத்துவர் பட்டத்தை பெற வில்லை என்பதால் இது உலக சாதனையாகும்… இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் சகோதரி ..

Read More

இஸ்ரேலின் கெடுபிடிக்கு மத்தியில் அக்ஸாவில் தொழுகையை நிறைவேற்றும் ஆயிரக்கணக்கான பாஸத்தீனர்கள். (படங்கள் இணைப்பு )

புனித ரமானை முன்னிட்டு ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் முதலாவது கிப்லா மற்றும் மூன்றாவது புனித பள்ளிவாயல் அல் அக்ஸாவில் தொழுகையை நிறைவேற்றுவதில் பலஸ்தீனர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இஸ்ரேல் கடும் கெடுபிடிகளையும், சட்டங்களையும் பிரகடப்படுத்திய போதும் அதை பொருட்படுத்தாத முஸ்லிம்கள் தமது தொழுகையை நிறைவேற்றுவதை காணக்கூடியதாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சுமார் இரு இலட்சத்து 20 ஆயிரம் பலஸ்தீனர்கள் ஜும்மா தொழுகையை புனிய பள்ளிவாயலில் நிறைவேற்றியுள்ளனர். இத்தொகையுடைய மக்கள் வந்து தமது வணக்கத்தினை நிறைவு செய்தபோதும்,…

Read More

மீண்டும் மஹிந்த வந்தால் அழிவு நிச்சயம் – சம்பிக்க

சர்­வா­தி­கார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் மஹிந்­தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்­சயம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எச்­ச­ரித்­துள்ளார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியினர் முட்­டாள்­க­ளாக செயற்­படக்கூடாது எனவும் அவர் தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஏற்­பட்­டி­ருக்கும் பிர­த­ம­ர் வேட்பாளருக்கான போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறு­கையில், கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இந்த நாடு பல சவால்­க­ளுக்கு…

Read More

பொது பல சேனா ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டி?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna(BJP)] என்ற கட்சியில் ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சில தமது பெயர்களையும் , செயலாளர்களையும் மாற்றியுள்ளன. தேர்தல் செயலாளர் காரியாலயத்தின் தகவலின்படி, தேசப்பிரிய ஜாதிக்க பெரமுன என்ற பெயரில் இருந்த கட்சி சிறிலங்கா ஜாதிக்க பலய என பெயர்மாற்றம் செய்யபபட்டுள்ளது. அதன் செயலாளராக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழுத்தலைவர் பியசிறி…

Read More