Headlines

(படங்கள்)இன்று மரிச்சுக்கட்டியில் ஆரம்பமானது கையெழுத்து வேட்டை….!

– மறிச்சுக்கட்டியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா- மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,கொண்டச்சி பூர்வீக கிராமங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் தம்மை இங்கிருந்து வெளியேற்ற எடுக்கப்படும் வேலைத்திட்டத்தை கண்டித்தும்,,தமது தாயக பூமியில் இறுதி மூச்சு வரை தாங்கள் வாழ்வதற்கு அரசாங்கம் உரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என கோறி  2 இலட்சம் மக்களின் கையொப்பத்தை பெறும் வேட்டை இன்று  ஞாயிற்றுக்கிழமை இப்பிரதேச மக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  மறிச்சுக்கட்டி மொஹதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த கையொப்பம்…

Read More

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது : அம்பாறை ஜம்இய்யத்துல் உலமா தலைவர்

அஸ்லம் எஸ்.மௌலானா இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின தலைவர் அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தெரிவித்தார். அம்பாறை மாவடட ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான விசேட செயலமர்வு நேற்று சனிக்கிழமை சாய்நதமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; “எமது நாட்டில் தற்போது ஷீயா கொள்கை மிகவும் தீவிரமாக…

Read More

சவூதி -ஜித்தாவில் கூட்டம் கூட்டமாக இறைவனின் மார்கத்தில் இணையும் மக்கள் நேற்றைய தினம் 25 மாற்று மதத்தவர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்!

இறைவனின் மார்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டாமாக இணையும் நிகழ்வுகள் உலகின் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது இந்த மார்கத்தை வெறுப்போர் மறுத்தாலும் இந்த மார்கத்தை இறைவன் முழுமையாக்கி வைப்பான் என்ற இறைவனின் சொல்லுக்கு சான்றாக நேற்றைய தினம் ஜித்தா மாநகரில் 25 மாற்று மதத்தவர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர் அந்த இனிய காட்சியின் சாட்சியாக உள்ள படத்தை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்

Read More

துபாய் மற்றும் கத்தார் நாட்டில் வாழும் நண்பர்கள் அனைவரும் வாசிக்கவும்.விபத்துக்களை புகைப்படமெடுப்பது தண்டனைக்குறிய குற்றமாகும்!

கட்டார் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களை புகைப்படமெடுத்து, அதனை Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது, இனிமேல் தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்திருக்கிறார்கள். இது சம்பந்தமான செய்தியை கடந்த (04.06.2015) வியாழக்கிழமை தோஹா நியூஸ் ஊடகத்தில் காணலாம். குற்றம் நிரூபிக்கப்படுபவர்கள் மீது மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை QR100,000 ($27,460) அபராதம் விதிக்கப்படும். இத் தகவலை கத்தாரில் வசிக்கும் உங்கள் உறவினர், நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். இவ்வாறான விபத்துக்களின் போது, சுற்றி நின்று புகைப்படங்களை எடுப்பவர்களிலும்,…

Read More

RRT சார்பாக சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு விடுத்துள்ள அவசர வேண்டுகோள்….

வில்பத்தை அண்டிய பகுதியில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் குடியேறியவர்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (07) ஞாயிற்றுக்கிழமை கையொப்ப வேட்டை ஒன்று ஆரம்பமாகிறது. மரிசிக்கட்டியில் முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீகத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் உடைந்து, தூர்ந்து போய்க் கிடக்கும்பள்ளிவாசலுக்கு அருகில் இந்த கையொப்ப வேட்டை அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. சுமார் 2 இலட்சம் முஸ்லிம்களின் கையொப்பங்களைத் திரட்டும் இன்றைய முதல் நாள் வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விஸ்தரிக்கப்பட்டு நாட்டிலுள்ள 2,000 பள்ளிவாசல்கள் ஊடாக…

Read More

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா

ஏ.எஸ்.எம்.ஜாவித் மன்னார், விடத்தல்தீவு சுஐப் எம். காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுசரணையுடன் நேற்று மாலை (06) கொழும்பு-10, தபால் திணைக்கள தலைமையக கேட்போர் கூடத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீனும், விடே அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூதும் சிறப்பு அதிதிகளாக…

Read More

றிஷாத் பதியுதீனுக்கு கிழக்கிலும் ஆதரவு கூடுகிறது – பஷீர் ஷேகுதாவூத்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் ஷேகுதாவூத் நீண்டதொரு உரையை நிகழ்த்தினார் . அவரது உரை ஆக்கபூர்வமானதாக இருந்தாலும் காலம், நேரம் என்ற பிரச்சினை காணரமாக விரைவாக முடியாதா என்ற ஏக்கப் பெருமூச்சு மண்டபத்தில் நிறைந்து காணப்பட்டது. சபை மரபு, பஷீர் ஷேகுதாவூதுக்கு மரியாதை என்ற இரு காரணங்களால் எவரும் மண்டபத்தை விட்டு வெளியேறவில்லை….

Read More

அமைச்சுப் பதவியை துறந்து முஸ்லிம் சமுகத்திற்கு போராடத் தயார் – றிஷாத் பதியுதீன்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் வில்பத்து விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிக்கை ஒன்றினைக் கையளித்துள்ளது. இந்த அறிக்கை நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது என அமைச்சிர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று (06) கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய “வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றச் சவால்கள்“ மற்றும் வில்பத்து தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் கலந்து…

Read More