Headlines

இந்த வெள்ளிக்கிழமையை மியன்மாருக்கான குரலாக பிரகடனப்படுத்துவோம்.

இஸ்ஸதீன் றிழ்வான் இன்வாத பெளத்த பிக்குகளால் பரிதாவமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றி மனித உரிமைகள் அமைப்புக்கள் இதுவரை சரியான கண்டனம் ஒன்றையும் வெளிடாத நிலையில் நாம் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள்…

Read More

வாஸ் குணவர்த்தன , மகன் இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தனர் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ஆகியோரின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சீ.பீ. எஸ். மொராயஸே, இவ்வாறு விளக்கமறியலை நீடித்து இன்று  உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால் மக்கள் கொந்தளிப்பு ஏற்படும், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இடமிருப்பதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேராவின் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்தியதன் பின்னரே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பிரதி…

Read More

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்தார் ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய்  மற்றும்  சகோதரனை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன்  தனது அனுதாபங்களையும்  தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும்  அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள்  தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி  வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன்  வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின்  மாணவர்கள்  மற்றும்  ஆசிரியர்களை சந்தித்து…

Read More

சீனாவில் முதியோர் இல்லத்தில் தீ: 38 பேர் கருகி சாவு

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பிங்டிங் ஷான் நகரில் முதியோர் இல்லம் உள்ளது. அங்கு 100–க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கு இரவில் திடீரென தீ பிடித்தது. பின்னர் படிப்படியாக முதியோர் இல்லத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 6 பேர்…

Read More

கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் முன் இதை ஒரு நிமிடம் படிங்க!

கூல் ட்ரிங்க்ஸ் அல்லது சாஃப்ட் ட்ரிங்க்ஸ் என கூறப்படும் சோடா கலப்பு அதிகமாக இருக்கும் பானங்களை விரும்பி பருகாதவர் யாருமில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று தெரியாது நாம் இதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். கூல் ட்ரிங்க்ஸில் கலக்கப்படும் நச்சுக்களின் தன்மையும், அது நாம் வீடு துடைக்க உபயோகப்படுத்தும் இரசாயனதிற்கு ஈடாக இருப்பதையும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நாம் கண்முன்னே நிகழ்ந்த உண்மை. ஆயினும் நாம் அதை மறந்து செயல்பட்டு வருகிறோம். கோடைக்காலம் தொடங்க…

Read More

அமெரிக்கவில் நடைபெற்ற போட்டியில் பதக்கங்களை குவித்த இஸ்லாமிய இளம் மேதைகள் !

அண்மையில் அமெரிக்காவின் ஒரு முக்கிய நிறுவனம் இளம் மேதைகளின் ஆற்றலை வெளிபடுத்தும் விதமாக ஒரு போட்டிக்கு ஏர்பாடு செய்திருந்தது அந்து பொட்டியில் உலகின் 75 நாடுகளை சார்ந்த 700 க்கும் அதிகமான இளம் மேதைகள் கலந்து கொண்டனர் அறிவியல் தொடர்ப்பான பல்வேறு ஆய்வு கட்டுரைகள் அந்த போட்டியில் பலர்களாலும் சமர்பிக்க பட்டது இதில் சவுதி அரேபியாவின் இளம் மேதைகளும் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் சவுதி அரேபியவின் இளம் மேதைகள் சமர்பித்த பல்வேறு ஆய்வு கட்டுரைகள் நடுவர்களின்…

Read More

ஜனாதிபதியின் ஆலோசகராக பைசர் முஸ்தபா நியமனம்

முன்னாள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

வித்தியாவின் படுகொலைக்கு விஷேட நீதிமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ் சென்றுள்ள ஜனாதிபதி, புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவியின் படுகொலை தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று உரிய தீர்ப்பு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வித்தியாவின் படுகொலையுடன்…

Read More

கைத்துப்பாக்கியுடன் செல்பி எடுத்த பெண்ணின் நெற்றியில் குண்டு பாய்ந்தது

கைத்துப்பாக்கியுடன் செல்பி புகைப்படம் எடுத்த ரஷ்ய பெண்ணின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் வெரோனிகா (21). செல்பி பிரியரான அவர் விதவித மான கோணங்களில் செல்பி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பாதுகாவலர் விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியை எடுத்த வெரோனியா அதனுடன் செல்பி புகைப்படம் எடுத்தார். அப்போது அவரது விரல் தவறுதலாக துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தியது. இதில் அவரது…

Read More

ஞானசார தேரர் விடுதலை

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  இன்று காலை குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தன் பின்னர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5000 ரூபா பிணையிலும்,  10 லட்ச ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

எகிப்து மாணவர்களுக்கு எதிராக தொடரும் மரண தண்டனை

-இப்னு ஜமால்தீன்- எகிப்தின் இராணுவத் தளபதியாக இருந்த அப்துல் பத்தாஹ் அஸ் சீசியின் தலைமையிலான குழுவினரால்ஜனாதிபதி முர்சி தலைமையிலான ஜனநாயக அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டபோராட்டத்தில் வெற்றிகண்ட சீசீ குழுவினர் எகித்தை ஆட்சி செய்து வருகின்றனர். சீசியின் அரசானது அந்நாட்டு சகோதரத்துவ உறுப்பினர்களை அரசியல் பலிவாங்கும் நடவடிக்கையில்ஈடுபட்டு வருகின்றது. அதன் வெளிப்பாடாக சகோதரத்துவ உயர்பீட உறுப்பினர்கள், கலாநிகள், ஆசிரியர்கள் உட்பட மாணவ மாணவியர்களுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் மரண தண்டனையாகவே இருக்கின்றது. சகோதரத்துவ, ஹமாஸ் அமைப்புகளுடன்…

Read More

​கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1, 2 ,3 ,7, 8, 9 ,10 ,11 ,12 மற்றும் கொழும்பு 13 ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மாலிகாகந்தயிலுள்ள அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ள்படவுள்ள சுத்திகரிப்பு…

Read More