Headlines

மதுரன்குலி – கனமூலை பாடசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியை காணவில்லை

ஆசிரியர் பீடம் காசு – பணம், தங்கம் மற்றும் ஏனைய பொருட்கள் காணாமல் போனதை கேள்வி பட்டு இருப்போம். அனால் நேற்று முன்தினம் மதுரன்குலி – கனமூலை பிரதேசத்தில் 2 ஏக்கர் காணி காணாமல் போயுள்ளது. மதுரன்குலி – கனமூலை பிரதேசத்தில் பாடசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியை காணவில்லை எனவும் கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப் படுமெனவும் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை புதிய கனமூலை இளைஞர் படையணி எனும் அமைப்பு விநியோகித்துள்ளது.

Read More

கத்தார் தொழிலாளர்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்கள் அறிமுகம்….

அபூ சுமைய்யா கத்தார் கத்தாரில் தொழில்  புரிபவர்களில் 85% வீதமானவர்கள் தொழிலாளர்கள் (85% of work force in Qatar temporary laborers ) இவர்கள் பெருந்தொகையான பணத்தை தங்களது நாட்டுக்கு அனுப்புகிறார்கள் கத்தார் தொழிலாளர்களுக்கு பல வகையான மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. அதில் ஊதிய பாதுகாப்பு திட்டம்  (Wage Protection System) , தொழிலாளர்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு நாட்டின் பல பாகங்களிலும் காரியாலயங்களை (opened office across the Country) திறந்துள்ளது.கத்தாரில் தொழில் புரியும்…

Read More

NVQ (தேசிய தொழில்சார் தகைமை முறைமை) சான்றிதழின் அவசியம்

– கஹட்டோவிட்ட ரிஹ்மி – தேசிய தொழில்சார் தகைமை முறைமை – National Vocational Qualification (NVQ) அதிகமானோர் NVQ பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் அறியாதும் இருக்கலாம். இந்த முறைமை ஆனது ஒருவருக்கு தொழில் சார்ந்த தகைமையை கொடுத்து விடும். NVQ சான்றிதழ் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொண்டால் தகுதியான தொழில் ஒன்றைத் தேடிப்பெற்றுக்கொள்வது இலகுவாகி விடும். அண்மைக்காலங்களில் அரச, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் கூட NVQ சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. தகவல்…

Read More

அமைச்சர் றிஷாத் தலைமையில் பாணந்துறை கெசல்வத்தை பள்ளிவாசல் திறப்பு விழா (படங்கள் இணைப்பு)

பாணந்துறை கெசல்வத்தையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா அண்மையில் இடம் பெற்ற போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன்,தொழிலதிபர் அல்-ஹாஜ்.ஜே.புஆத் மற்றும் பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.ஆரிப் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைப்பதை பள்ளி பரிபாலன சபை உறுப்பினர் சாஹிர் அன்சாரி,பள்ளி அபிவிருத்தி குழு உறுப்பினர்களான பைசல்,பயாஜ் ஆகியோரையும் படங்களில் காணலாம்.

Read More

அரசியல் கட்சியொன்றை தொடங்க; தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்கும் பொதுபலசேனா

அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு பொதுபலசேனா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

திஸ்ஸவை நீக்கியது சட்டவிரோதமானது: உயர்நீதிமன்றம்

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது. இந்த மாதிரியான மனுவை இரண்டு மாதகாலத்துக்குள் விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பது சட்டமாகும். இந்த மனுவை திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் விசாரணை

முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  நிதி மோசடி பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஜனாதிபதி மைத்திரிபாலவை போன்ற எந்தத் தலைவர்களையும் அரசியல் வாழ்க்கையில் கண்டதில்லை : சமரசிங்க

எனது அரசியல் வாழ்க்கையில்  அதிகாரங்களை கைவிட்ட  எந்தத் தலைவரையும் நான் கண்டதில்லை.    தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே  தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தனது அதிகாரங்களை குறைத்துக்கொண்டுள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க  தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்க செயலர் இலங்கைக்கு வந்ததன் மூலமும் அவர் கூறிய விடயங்களின் மூலமும் உலகின் மிகப்பெரிய  வல்லரசு நாட்டின் உதவி எமக்கு கிடைத்துள்ளமை உறுதியாகியுள்ளது. இது   மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும்  அமைச்சர்…

Read More

மீண்டும் பிறந்தார் இளவரசி டயானா

இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்பிற்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (வயது 32). ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேட் மிடில்டனை சந்தித்தார். இருவரும் காதலித்து, 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு…

Read More

பேக்கரிகளில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம்

பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட பேக்கரி தின்பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சாதாரண நிலையங்களில் தராசு…

Read More

நேபாளில் அசிங்கப்பட்ட இந்திய பத்திரிக்கைத் துறை!

80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் இதுவரை 7 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ள இந்திய பத்திரிகையாளர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாகக்கூறி அவர்களை வெளியேறும்படி வலியுறுத்தி உள்ளனர். இந்திய பத்திரிகையாளர்களுக்கு எதிராக, “உங்கள் நாட்டிற்கு திரும்பி போங்கள்” என்று ஹேஷ்டேகை நேற்று உருவாக்கி டுவிட்டரில் ஒரு லட்சம் டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார்கள் நேபாள மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள். டுவிட்டர்…

Read More

சவுதி அரேபியாவின் எதிர்காலம் என சவுதி மன்னரால் அடையாளம் காட்டபட்டுள்ள சவுதி அரேபியாவின் புதிய இளவரசர்கள் !

மௌலவி செய்யது அலி ஃபைஜி சவுதி அரேபியாவின் மன்னாராக சுமார் 100 நாட்களுக்கு முன்பு பதவியேற்ற மன்னர் சல்மான் தொடர்ந்து அதிரடியாக செயலாற்றி வருகிறார் நீண்ட நெடுகாலத்திர்கு பிறகு சவுதி அரேபியாவிர்கு ஒரு சிறப்பான தலைமை கிடைத்திருப்பதாக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இந்த 100 நாட்களில் அதிரடியான 50 அரசாணைகளை பிரப்பித்து சவுதி மக்களுக்கு மட்டும் இன்றி ஏமன் ஏஜிப்ட் பர்மா சிரியா பலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள உலக முஸ்லிம்கள் பயன் பெறும் விதத்தில் பல்வேறு…

Read More