Headlines

பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்: வாழைச்சேனையில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்டகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் அடங்கிய குழுவினரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (22) காலை 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை, மீறாவேடை, கிண்ணயடி, மாஞ்சோலை, கறுவாக்கேணி போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்று வந்ததையடுத்து வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகேயின் ஆலோசனையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.திப்புட்டுமுனயின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி…

Read More

அல்-ஜசீரா டி.விக்கு இந்தியஅரசு தடை!

இந்தியாவின் தவறான வரைபடத்தை அல் ஜசீரா சேனல் கட்டியதாக குற்றம் சாட்டப் பட்டே அல் ஜசீரா டிவிக்கு இந்திய அரசு 5 நாள் தடையை விதித்துள்ளது. இதனால், அல் ஜசீரா டிவி இந்தியாவில் தற்போது தெரியவில்லை. அல் ஜசீரா டிவி சானல் ஒளிபரப்பாகும் எண்ணில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறையின் உத்தரவுப்படி இந்த சேனல், ஏப்ரல் 22ம் தேதி 00.01 மணியிலிருந்து 2015, ஏப்ரல் 27ம் தேதி 00.01 வரை ஒளிபரப்பப்பட மாட்டாது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது….

Read More

இத்தாலியில் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல்

எதிர்வரும் 3/5/2015 அன்று மிலானோ நகரில், வியா கொஸ்ஸன்ஸா 2 என்ற முகவரியில் அங்குரார்ப்பணம் செய்யபட உள்ளது. இலங்கை முஸ்லிம்களின் நீண்டகால கனவாக இருந்தது.அல்லாஹ்வின்   உதவியுடன் இது நிறைவு பெறுகிறது, மாஷாஅல்லாஹ். இதுவே இத்தாலியில் துவங்கப்படும முதல் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஆகும். இம்முயற்சில் பல சகோதரர்களின் அயரா முயற்ச்சியுடன்,குறிப்பாக தலைவர்,செயலாலர் உட்பட நிர்வாக்க்குழுவினர் அல்லாவுக்காக பாராட்டப்பட வேண்டியவர்கள். சகோதரர்கள் இம்முயற்சியில் ஒற்றுமையாக முன்னேற உங்கள் அணைவரினதும் துஆவை எதிர்பார்க்கிறோம்.

Read More

நாடாளுமன்றத்திற்கு செல்ல பசிலுக்கு மன்று அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவை, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்குமாறு கடுவெல நீதிமன்ற நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் பசில் மற்றும்  மூவர் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் பசிலை நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்குள்ள அனுமதியளிக்குமாறு சிறைச்சாலை வட்டாரங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, பசில் ராஜபக்ச  உள்ளிட்ட மூவரும்…

Read More

வெலிகடை சிறைச்சாலையில் கோட்டா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு இன்று சமூகமளித்தார். அங்கு வாக்குமூலமொன்றை அளித்த அவர் பின்னர் அங்கிருந்து வெளியேறி , முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன்  வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவை சந்திப்பதற்கு அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்குமுன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட து. இதில் கோத்தபாயவின் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

கோட்டாபயவுக்கு காலஅவகாசம்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்படி தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிக்க 90 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கோட்டாபய கோரியதாகவும், அதற்கு ஆணைக்குழு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

Read More

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூல ஆவணத்தை அவசர பத்திரமாக பிரதமர் முன்வைத்ததாக அவர் கூறினார். அதன்படி விரைவில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உம்ரா செய்ய சவூதிக்கு வந்த ஒபாமாவின் பாட்டியும் மாமாவும்!

– நூருல் இப்னு ஜஹபர் அலி – அமேரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மற்றும் ஒபாமாவின் மாமா சயீத் ஒபாமா ஆகியோர் புனித உம்ராவை நிறைவேற்றுவதற்க்காக சவூதி அரேபியா வந்துள்ளனர். மேலும் மக்காவில் நடைபெற்று வரும் முஹம்மது நபி குறித்த கண்காட்சியை 2 மணி நேரம் பார்வையிட்ட சாரா உமர் கண்காட்சி மிகவும் அருமையாக இருந்ததாகவும் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் அதிகம் பரப்புவதற்க்கும் இஸ்லாம் குறித்த குழப்பங்களை போக்குவதற்க்கும் இது போன்ற கண்காட்சிகள்…

Read More

குறுகிய நேர விசாரனையின் பின்னர் வீடு திரும்பிய கோத்தா…!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  வாக்குமூலம் வழங்க  இலஞ்ச ஊழல் திணைக்களத்தை வந்து குறிகிய நேரத்தில் விசாரணைகளை முடித்துக்கொண்டு திரும்பியதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார். இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக, நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டும் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் செய்து வருவதாகவும்வ இதனால், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக உள்ள வீதி மூடப்பட்டுள்ளதுடன் போலிசார் குவிக்கபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்…

Read More

வடமாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள தபால் துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர்

மன்னார் நிருபர் தபால்துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்கள் எதிர்வரும் மே மாதம் 10 ம் திகதி அளவில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்ய உள்ளதோடு வடமாகாண பள்ளிவாசல்கள் நிர்வாகிகள், பரிபாலனசபை தர்மகர்த்தாக்கள் மத்ரசா நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும் தபால்துறை முஸ்லிம் கலாசார அமைச்சரின் வடமாகாணத்துக்கான இணைப்பாளரும், வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைவருமான மெளலவி ஏ.எஸ்.எச்.எம். முபாரக் ரஷாதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்தவின் வாக்கு சரிவு!

மகிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலில் பெற்றிருந்த 58 லட்சம் வாக்குகள் தற்போது குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது மகிந்தராஜபக்ஷவின் 20 லட்சம் வாக்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது மக்கள் முன்னைய அரசாங்கத்தின் உண்மையான முகத்தை அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

குருநாகல் பள்ளிவாசல் மாற்றம்

குருநாகலில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றி வேறு இடம்மொன்றில் அமைக்கவிருப்பதாக, அமைச்சர் நந்தமித்தர ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளது. அந்த பள்ளிவாசலுடன் இணைந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் தொல்பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிவாசலை அகற்றுமாறு சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தன. இதன் போது அந்த அமைப்புக்கு எதிராக காவற்துறையினர் தாக்குதல் நடத்தி கலைத்திருந்தனர். தற்போது…

Read More