Headlines

விசாரணைக்கு வேறு திகதி கேட்கிறார் கோத்தபாய!

லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவினால் கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரரும் முன்னாள் ஜனாதபிதியுமான மஹிந்த ராஜபக்சவுடன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் தன்னால் குறித்த தினங்களில் சமூகமளிக்க முடியாது என்பதால் மாற்றுத் திகதியை நிர்ணயிக்கும்படி அவர் கோரியுள்ளார். மிஹின் லங்கா நிறுவனம் பற்றியும் அதேவேளை அவன்ட் கார்ட் நிறுவனம் பற்றியும் விசாரிக்க 24 மற்றும் 27ம் திகதி அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே தான் வேறு பணிகளில் குறித்த நாட்களில் ஈடுபடுவதால் மாற்றுத் திகதி வழங்குமாறு அவர் கடிதம் மூலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரிப்பதில் என்ன பிழை – ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரணை நடத்துவதில் என்ன பிழை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தீர்மானம் சுயாதீனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சாட்சியமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு மஹிந்த அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் நடவடி;ககைகளில் அரசங்கம் தலையீடு செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் ஏதெனும் பிரச்சினை இருந்தால் முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணியின் ஊடாக உரிய…

Read More

ஐ.நா போதை பொருள் – குற்றவியல் தடுப்பு அலுவலகம் இலங்கையில்

ஐக்கிய நாடுகள்  அமைப்பின் போதை பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு அலுவலகம் ஒன்று இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐநா போதை பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு காரியால பிரதானி யூரி பெடட்டோவுக்கும் நீதிமன்ற அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது. இந்து சமுத்திரத்தை கேந்திரமாக கொண்டு உலக நாடுகளுக்கு போதைப் பொருள் விநியோகப்படுத்தை தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும். ஐநாவின் போதை பொருள் தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு சபையின் 13ஆவது உயர் மட்ட குழுக்கூட்டம்…

Read More

கிழக்குப் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் ஏப்ரல் 27ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழக 2013/2014ம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதலாம் வருட புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 27.04.2015ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைகழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் ரி.பாஸ்கரன் தெரிவித்தார். கலை கலாசார பீடம், விவசாய பீடம், வர்த்தக முகாமைத்துவப் பீடம், விஞ்ஞானப் பீடம் போன்ற மேற்படி பீடங்களைச் சேர்ந்த சகல மாணவர்களும் 26.04.2015 அன்று பிற்பகல் 05.00 மணிக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்திற்கு சமுகமளிக்குமாறு சிரேஸ்ட உதவிப் பதிவாளர் அழைப்பு விடுத்துள்ளார். குறித்த…

Read More

காலி குளிர்பான பாட்டில்களால் காஸா சிறுவர்கள் உருவாக்கிய படகு

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் சிக்கிக் கொண்டு போர் இல்லாத வேளைகளில் பொழுது போகாத காஸா இளைஞர்களில் இருவர் ஒன்று சேர்ந்து புதிதாக ஏதாவது செய்தால் என்ன? என்று சிந்தித்ததன் விளைவாக சுமார் ஆயிரம் காலி குளிர்பான பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட சிறு படகு உருவாகியுள்ளது. எலக்ட்ரீஷியனாக இருக்கும் பாஹா ஒபைட்(25) மற்றும் வக்கீலாக தொழில் செய்யும் மொஹமட் ஒபைட்(25) ஆகியோர் இந்தப் படகை தயாரித்துள்ளனர். 4 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த படகை…

Read More

விற்பனைக்கு வரவிருந்த இறை இல்லத்தை ஒரு முஸ்லிமின் கொடை உள்ளம் காத்தது இந்த இறை இல்லத்தை காப்பாற்ற 5 மில்லியன் ரூபாய்களை வாரி வழங்கினார்

நீங்கள் படத்தில் பார்ப்பது சுவிடனின் அஸ்கெலெஸ்றோனா நகரில் அமைந்துள்ள இறை இல்லமாகும். சுவீடனீல் முதல் முதலாக எழுப்ப பட்ட இறை இல்லமும் இதுவாகும். இந்த இறை இல்லத்தில் தொழுகை நடப்பது போல் அங்கு இஸ்லாமிய ஆய்வு மையமும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு திருமறையை போதிக்கும் போதனை கூடமும் அமைந்திருக்கிறது இந்த பள்ளி வாசலின் பல் வேறு புனரமைப்பு பணிகளுக்காக வங்கிகளில் கடன் பெற பட்டிருந்தது அந்த கடன் உரிய காலத்தில் செலுத்த படாததால் குறிப்பிட்ட வங்கி அந்த…

Read More

பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட் -இதோ பீட்ரூடின் நன்மைகள்!

பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட் 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்னைகள் தீரும். புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும். ரத்த சோகை, உடல் எடை சரியாகும். முகப்பொலிவு கூடும் சிறுநீரக…

Read More

உஷார் ரிப்போர்ட் : உங்கள் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் புகைப்படங்கள் எடுக்கும் போது…!

மாயவரத்தான் கி ரமேஷ்குமார் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பிவிட்டார்கள். தற்போது கோடை விடுமுறைக்காக லண்டன் செல்ல எண்ணி, இலங்கை வழியாக பயணம் செய்திருக்கிறார்கள். திருச்சி விமான நிலையத்தில் பிரச்னை இல்லை.ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் அவரது இரண்டாவது மகளின் பாஸ்போர்ட்டினைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அதில் புகைப்படத்தில் கன்னத்தில் வைத்திருந்த திருஷ்டிப் பொட்டினை மச்சம் என்று கருதி, அந்த மச்சம் இப்போது இல்லை. எனவே புகைப்படத்தில் இருக்கும் குழந்தையும், இங்கே…

Read More

இது தான் இஸ்லாம்….!! சாலை விபத்தில் பலியான மாற்று மத சகோதர்களுக்கும் உதவி!

பள்ளப்பட்டியை சேர்ந்த ஆலிம்கள் சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் அருகே விபத்திற்குள்ளாகி அனைவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. அரசின் உதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த முஸ்லிம்கள், ஜமாஅத்துல் உலமா சார்பாக வசூல் செய்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்தனர். அரசு உதவி செய்யாவிட்டாலும் அறியாத புறத்திலிருந்து அல்லாஹ்வுடைய உதவி வந்ததால் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. அதனைத்தொடர்ந்து நேற்று முன் தினம் (17.04.2015) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கும்…

Read More

மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் – பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவைக்கு நடுவே அமர்ந்திருந்தே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பில் இன்றே எமக்கு தீர்மானம் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கடமைகள் சம்பந்தமாகவே அழைக்கப்பட்டுள்ளார். அது பிரச்சினையாக…

Read More

கோட்டாபயவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ம் மற்றும் 27ம் திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More