Headlines

கியூபா பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக  அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். கியூபாவிற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பகை நிலவி வந்தது. எனினும் கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, கியூப உயர் மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் கியூப தலைவர் ராகுஸ் கெஸ்ரோவிற்கும் இடையிலான நேரடி சந்திப்பு…

Read More

மிஹின் லங்காவின் புதிய விமானசேவைகள் ஜூன் மாதம் ஆரம்பம்

மிஹின்லங்கா விமானசேவை  கொழும்பு தொடக்கம் கல்கத்தா வரையான தனது புதிய சேவையை எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இப்புதிய சேவையினூடாக A319 அல்லது A321விமானம் வாராத்துக்கு மூன்று தடவைகள் பயணிக்கவுள்ளது.ஜூன் மாதம் நடுப்பகுதியில் இருந்து மேலும் பல விமானசேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கொழும்பு- மதுரை மற்றும் கொழும்பு- டாக்கா விமானசேவை வாரத்துக்கு 6-7 தடவைகளாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.கொழும்ப- லாகூர் விமானசேவை ஜூன் 18 முதல் வாராந்துக்கு 3-5 தடவையும் கொழும்பு- சார்ஜா சேவை ஜூன் 19ஆம் திகதி…

Read More

இலங்கை ரயில்வே திட்டத்தை நவீனமயமாக்க நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்!

நாட்டின் கடுகதி ரயில் சேவை நெட்வேர்க் வலயத்தினை நவீனமயமாக்கும் பொருட்டு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு ஒரு நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து களனிப்பள்ளத்தாக்கு அவிசாவளை ஊடாக சபுகஸ்கந்த செல்லும் ரயில் பாதை மீளப்புனரமைக்கப்படவுள்ளது.  அத்துடன் கரையோரத்தில் காணப்படும் ரயில் வே தளங்கள் இரட்டை தளங்களாக விரிவாக்கி அமைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வகையில் அளுத்கம வுக்கான ரயில் தளப்பாதையும், பொல்காவல குருநாகலுக்கு இடையிலான ரயில்வே தளங்களுமே விரிவாக்கி அமைக்கப்படவுள்ளன. அநுராதபுரத்திலிருந்து வவுனியா, மாகோ, திருகோணமலை…

Read More

இரண்டு கோடி ரூபா தங்க நகைகளை பனியனினுள் மறைத்து கடத்த எடுத்த முயற்சி முறியடிப்பு

எம்.ஐ.அப்துல் நஸார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை தமது பனியனினுள் வைத்து மறைத்து இந்தியாவின் சென்னை நகருக்கு கொண்டு செல்வதற்கு வந்த இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் நிறை 4.2 கிலோகிராமாகும். சந்தேக நபர்கள் ஜெட் விமான சேவைக்குச் சொந்தமான எஸ்.ஜீ.004 இலக்க விமானத்தில் இந்தியாவின் சென்னை நகருக்கு செல்வதற்கு வந்திருந்த…

Read More

மக்களுக்கு சேவை செய்வதே இஸ்லாமிய அரசின் நோக்கம் மக்கள் சேவையில் அலட்சியம் காட்டும் எவருக்கும் எனது அமைச்சரவையில் இடமில்லை சவுதி மன்னர் சல்மான் அதிரடி

சவுதி அரேபியாவின் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் அஹ்மத் கதீப் இவர் சவுதி அரேபியவின் தென்பகுதியில் உள்ள மருத்துவமனைகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டினார் என்றும் அவரை சந்திக்க விரும்பிய பொது மக்களை சந்திக்க மறுத்தார் என்றும் அவரின்மீது சுமத்த பட்ட குற்றசாட்டு மன்னர் சல்மானின் கவனத்திர்கு கொண்டு செல்ல பட்டதை தொடர்ந்து அவரை அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டு முஹம்மது என்பவரை புதிய சுகாதரா துறை அமைச்சர் மன்னர் சல்மான் நியமித்துள்ளார் பொது மக்களுக்கு சேவை…

Read More

சுகப்பிரசவத்திற்கு பேரீச்சம்பழம்!

பேரீச்சம் பழம், குடும்பத்தின் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு சத்தான பழம். கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும். நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம். நல்ல தரமான கொட்டையில்லாத பேரிச்சம் பழங்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு அப்பழங்கள் மூழ்கும்படி, சுத்தமான தேனை ஊற்ற வேண்டும். மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில்…

Read More

சொகுசு வாழ்கையில் மட்டுமே மூழ்கி கிடந்த சவுதி நாட்டவர்கள் புனித போராளிகளாக போர்களத்தில்!

சையது அலி பைஜு சவுதி அரேபியா என்பது செல்வ வழம் நிறைந்த ஒரு நாடு இந்த நாட்டு குடி மக்களில் பெரும் பகுதியினர் சொகுசான வாழ்கைக்கு பழகி போனவர்கள் எண்ணை வளம் அந்த நாட்டில் கண்டறிய படுவதர்கு முன்பு அவர்களிடம் இருந்த உழைக்கும் ஆற்றலும் போர் குணமும் எண்ணை வயல்களால் குவிந்த செல்வங்களுக்கு பிறகு சற்று குறைந்து போனது என்பது உண்மையே ஆனால் சவுதமன்னர் சல்மான் ஆஸிபத்துல் ஹஸ்ம் என்ற போரை அறிவித்த பிறகு சவுதி நாட்டவரிடையே…

Read More

துபை மெட்ரோவில் மீன் எடுத்து செல்ல தடை..!

துபாய் மக்கள் அதிகமாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து துறையில் துபாய் மெட்ரோ முதல் இடத்தில் உள்ளது. பல பயணிகளின் எண்ணத்தை கருத்தில் கொண்டு துபாய் மெட்ரோவில் மீன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

Read More

துபாயில் புதிய சட்டம்: தொலைந்த பொருட்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10% சன்மானம்:

தொலைந்த பொருட்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் 10 சதவிகிதம் சன்மானமாக வழங்கும் புதிய சட்டம் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொலைந்த பொருட்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் 10 சதவிகிதம் சன்மானமாக அளிக்க வேண்டும் என்று துபாய் மன்னரும், துணை ஜனாதிபதி மற்றும் பிரதமராக உள்ள ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். சன்மான வரம்பு 50 ஆயிரம் திர்ஹாம்கள் ஆகும். கண்டுபிடித்த பொருளை அந்த…

Read More

விசேட போக்குவரத்து சேவைகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறையில் சென்றவர்கள் மீண்டும்  திரும்புவதற்காக விசேட பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு பயண முடிவிடங்களில் இருந்து கொழும்பிற்கான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர்  தெரிவித்தார். இதேவேளை, விடுமுறையின் நிமித்தம் தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ள மக்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ரயில்களுடன் மேலதிகமாக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை…

Read More

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறப்பு

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம். இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை  862 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன்  488 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Read More

மக்கள் காங்ரஸின் சர்வதேச விவகார பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் அன்வர் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்ரஸின் சர்வதேச விவகார பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் அன்வர் எம். முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீனினால் அண்மையில் வழங்கப்பட்டது. சிம்ஸ் கெம்பஸின் பணிப்பாளர் நாயகமான அன்வர் எம் முஸ்தபா, தென் கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முன்னாள் உறுப்பினராவார்.

Read More