Headlines

பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு நிகழ்வு!

இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவு கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு கிராண்ட் ஒரியன்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு (SLPAFA) கழகம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை பாகிஸ்தான் சமூகத்தினைச்சார்ந்த பல மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பங்குபற்றுனர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையில் கேள்விகள் தொடுக்கப்பட்டு போட்டி நிகழ்வும் இடம்பெறவுள்ளது. கேட்கப்படும் கேள்விகள் இலங்கை…

Read More

வெயில் அதிகமானால் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும்:எய்ம்ஸ்

மிக வேகமாக மனிதர்களைப் பலி கொண்டு வரும் பன்றிக் காய்ச்சல் நோய் வெயில் அதிகமானால் கட்டுக்குள் வந்துவிடும் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. வட மாநிலங்களில் மிக வேகமாக பன்றிக் காய்ச்சல் பரவி, மனித உயிர்களை அதே வேகத்தில் பலி கொண்டு வருகிறது. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 18 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்றும், இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 42 பேர் பலியாகியுள்ளனர் என்றும் சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்றிக்…

Read More

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு சோனியா காந்தி கடிதம்!

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் திருத்தங்களை செய்யாமல் அதை அவசரச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அன்னா ஹசாரே பேரணி நடத்துவதாக திட்டமிட்டு இருந்தார். என்ன காரணத்தினாலோ பேரணியை இப்போது நடத்த முடியாது என்று ரத்து செய்துள்ளார். இந்நிலையில்தான் வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளமல், நிறைவேற்ற நினைக்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு…

Read More

கட்டார் அமீர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம்

-Mahdoom- கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வர உத்தேசித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்டார் உயர் மட்ட தூதுக் குழுவுடன் மிக விரைவில் இலங்கை வரவுள்ள கட்டார் அமீர் இலங்கை ஜனாதிபதி உட்பட உயர் மட்ட தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக அறிய வருகிறது. கட்டார் இயற்கை கேஸ் வாயுவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக விளங்குகின்றது….

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தூய்மையான எண்ணங்கள் காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் அரசாங்கத்தை விட்டு சென்று விடுவோம் என எண்ணி சிலர் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அணிவதற்கான ஆடைகளைத் தைக்கத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால மீது இடி விழ வேண்டுமென வேண்டியவர்கள் இன்று பிரதமர்…

Read More

வாழைச் சேனைக் கடதாசிஆலை ஊழியர்களது சம்பளம்கிடைப்பதற்காக நடவடிக்கை. பிரதியமைச்சர் அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் வாழைச் சேனைக் கடதாசிஆலையில் கடமையாற்றும் ஊழியர்களது சம்பளம்கிடைப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அமீர் அலி இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். வாழைச்சேனை கடதாசி ஊழியர்கள் தமது 5 மாத சம்பளம் மற்றும் கடந்த 3 வருடமே சலாபிநிதி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பிரதமர் கவண்த்தினை ஈக்கும் வகையில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் சுழற்சி முறையில் உண்னாவிரதப் போராட்டத்தில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு பிரதியமைச்சர் அமிர் அலிமேலும் கருத்து தெரிவிக்கையில் – கடந்த…

Read More

பேருவளை பெண்மணிக்கு 68,000 சவுதி ரியால் வழங்க உத்தரவு

சவுதி அரேபியாவில் 13 ஆண்டுகளாக வேலை செய்த இலங்கை பணிப்பெண்னுக்கு கூலி கொடுக்காத எஜமானனுக்கு  68,000 சவுதி ரியால் அபராதமாக வழங்கும்படி சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. -வாழ்க உயர் நீதிமன்றம்- பேருவளை பகுதியை சேர்ந்த 59 வயது காதர் இஸ்மாயில் ஆசியா உம்மா என்ற பெண்ணுக்கே இவ்வாறு 13 ஆண்டுகளாக வேலைக்கு சம்பளம் கிடைக்கவில்லை.  அவரின் எஜமானருக்கு 68,000 சவுதி ரியால் அபராதமாகவும்  குறிப்பிட்ட பெண்ணின் கொழும்பு விமான  டிக்கட் கட்டணங்களை கொடுத்து அவரை இலங்கை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்…

Read More

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் முன் விசாரிக்க கோரிக்கை

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கை மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் முன் விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபரால் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு சட்ட மா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக இதில்…

Read More

முஸ்லிம் வர்த்தகர்கள் அதிகளவில் உள்ள யுனிட்டி பிளாசாவில் தீ -இது மற்றுமொரு நோலிமிட்டா…?

அஸ்ரப் ஏ சமத் பம்பலப்பிட்டி யுனிட்டி பிளாஸாவில் 7வது மாடியில் உள்ள கணனி களஞ்சிய சாலையில் இன்று காலை 06.30 மணிக்கு பாரிய தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்திற்கு வெளியே புகை வெளிவருதை அவதாணித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பம்பலப்பிட்டி பொலிசாருக்கு அறிவித்திருந்தனர். உடன் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்டடு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இக் களஞ்சிய சாலையில் இலக்ரோணிக் பொருட்கள் எரிந்ததால் இரசாயன புகை வெளிவந்து கொண்டே இருந்தது. இதனால் முக சுவாசிக்க ஒட்சிசன் மாஸ்க் அணிந்து தீயணைப்பு…

Read More

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா-தென்கொரியா ராணுவ பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தென்கொரியா-அமெரிக்கா இணைந்து மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. நீரிலும், நிலத்திலும் நடக்கவிருக்கும் இந்த பயிற்சிகள் வரும் மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறும். இருநாடுகளும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சியில் அமெரிக்க கடற்படையை சேர்ந்த 1000 வீரர்களும் தென்கொரியாவை சேர்ந்த 300 வீரர்களும் பங்கு பெற இருக்கிறார்கள். கொரியா பிரிவினைக்கு பிறகு தென் மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே தொடர்ந்து…

Read More

இலங்கையில் இப்படியும் ஒரு சாரதி..!

க.கிஷாந்தன் பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ் சாரதியின் உதவியுடன் மாணவியொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று அட்டன் நோர்வூட் பகுதியில் 18.03.2015 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சதாநந்தனி என்ற பாடசாலை மாணவி ஒருவர், மஸ்கெலியாவில் உள்ள தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது 7,200 ரூபாய் பணம், அடையாள அட்டை ஆகியன அடங்கிய பணப்பையை பஸ்ஸிலேயே மறந்து விட்டு சென்றுள்ளார். பணப்பையை பஸ்ஸில் வைத்துவிட்டு இறங்கியதை உணர்ந்த அம்மாணவி,…

Read More

தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் கைது

-க.கிஷாந்தன்- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் பசான் ஹிம்மாலக்க நேற்று  பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர் தலவாக்கலை முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கியதாக கிடைத்த முறைபாடுயடுத்து இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ஜானக சந்திரட்ண என்பவர் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதேச சபை உறுப்பினரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள்…

Read More