Headlines

அமைச்சர் றிஷாத் பிர­தமர் மோடியுடன் சந்திப்பு

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நாளை மறு­தினம் வெள்ளிக்­கி­ழமை இலங்கை வரு­கின்றார். இலங்­கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர் ஒருவர் 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் உத்­தி­யோக­பூர்வ அரச விஜ­யத்தை மேற்­கொண்டு இலங்கை வரு­கின்­றமை மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது பல்­வேறு முக்­கி­ய­மான விட­யங்கள் இடம்­பெ­ற­வுள்­ள­துடன் பல உடன்­ப­டிக்­கை­களும் இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில்…

Read More

மொத்த சனத்தொகையில் நான்கு சதவீத இலங்கையர்களை கொண்ட கட்டார் நாட்டிற்கு Free visa வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Safwan Basheer கடாரின் மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதம் இலங்கையர்கள். இலங்கையிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கட்டாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். Qatar Free Visa என்பது இதுதான். அந்த வீசாவில் மூன்றுமாதம் கடாரில் சட்டபூர்வமாக வாழமுடியும். அந்த மூன்று மாத காலத்துக்குள் ஒரு  நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு அந்த நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். கடாரின் அதிகமான நிறுவனங்கள் இரண்டு அல்லது, ஐந்து வருடத்துக்கு ஒரு தொழிலாளியோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. கடார் தொழில்…

Read More

பிலிப்பைன்ஸ் இளவரசி மாரியா YMMA தலைமையகத்தில்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு இளவரசி மாரியா ஆமோர் பல தலைவர்கள்,அமைப்புக்களுடனான சந்திப்புக்கள் நடைபெறவுள்ள நிலையில் இன்று சரத் போன்சேக்கா,அமைச்சர் ரோசிசேனாநாயக்க இவர்களை சந்தித்ததோடு ACYMMA தலைமையகத்திற்கு விஜயம் செய்து YMMA YWMA உத்தியோகத்தர்கள் உடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கோண்டார்.

Read More

யாழ் முஸ்லீம்களின் வரலாற்றுப் பார்வை -நூல் வெளியீடு

அஸ்ரப் ஏ சமத் வெளியீட்டு வைபவத்திற்கு வருகை தந்திருந்த 457 பேருக்கும் இந் நூல் முற்றாக இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. யாழ் முஸ்லீம்களது கல்வி, பண்பாடு இலக்கிய பங்களிப்பு தொழில் அரசியல் அவர்கள் சந்தித்த அனர்த்தங்கள். இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் சிதறுண்டு வாழும் நிலை, மீளவும் யாழ் செல்ல முடியுமா? என்னும்; ஏக்கம். 21ஆம் நூற்றாண்டு ஆரம்ப கால யர்ப்பாணத்து முஸ்லீம்களின் நிலை முதலானவை தொடாபான வரலாற்றுப் பார்வையை இன்றுள்ள யாழ் முஸ்லீம்களும் எதிர்கால சந்ததியினரும்…

Read More

மஹிந்தவுக்கு முற்றிலும் மாறான விதத்தில் சிறிசேன – டேவிட் கேமரூன்

அஸ்ரப் ஏ சமத் இலங்கையில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற விடயத்தை பிரிட்டன் ஒருபோதும் மறக்காது. அதேபோன்று செப்ரெம்பரில் ஐ.நாடுகள் விசாரணை அறிக்கை வெளியாகி விவாதிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாகவுள்ளோம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவை நேற்றுச் சந்தித்த பிரிட்டனின் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதியுள்ளசெய்தியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைக்கு 2013 இல் பயணம் செய்த தருணத்திலிருந்து…

Read More

இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம்

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்களை விட 10 எண்ணிக்கை அதிகமாகும். இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். இந்த விளக்கப்படம் 9 நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து விளக்குகிறது. 1980 ஆம் ஆண்டுகளில் 65 ஆயிரமாக உச்சத்தை அடைந்து இருந்த அணு ஆயுதங்கள் பிறகு 10…

Read More

ரஞ்சன் ராமநாயக்க, விமல் வீரவன்சவுக்கு சவால்!

கால்நடை அபிவிருத்தித்துறை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார். இது தொடர்பான அழைப்பை அவர் தமது முகநூலில் பிரசுரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கண்டிக்கூட்டத்தில் 10ஆயிரம் பேர் பங்கேற்றால்; தூக்கிட்டு கொல்வதாக தாம் சவால் விடுத்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய கண்டிக்கூட்டத்தில் 10ஆயிரம் பேர் பங்கேற்றமையால் தாம் தற்கொலை செய்துக்கொள்ளவேண்டும் என்றும் விமல் வீரவன்ச கூறி வருவதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். எனினும் தாம் ஒருபோதும்…

Read More

இலங்கையில் நல்லிணக்கம், ஒத்துழைப்பு ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பம்

கடந்த தேர்தலுக்குப் பின் இலங்கையில் ஜனநாயகம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வரலாற்று வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேசத்தின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நன்மை அடையக்ககூடிய அளவு சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் ஜெப்ரி பெல்ட்மென் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தனது இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில்…

Read More

Lanka’s ICT exports to cross $1b this year’: Rishad

Impressed by Lankan ICT sector: JISA’s Yamamoto Coming up, 2 Lankan ICT visits to Tokyo: JETRO’s Obama 2014 Lanka’s ICT exports at $815 m The visiting Japanese IT experts delegation with Industry and Commerce Minister Rishad Bathiudeen, EDB Chairman and CEO Bandula Egodage and JETRO Colombo Resident Representative Kazuhiko Obama Sri Lanka’s high-tech exports are…

Read More

இனி சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை கிடையாது – ரவி

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் வழங்கப்படாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். இது குறித்து ´சவுத் சைனா மார்னிங் போஸ்ட்´ என்ற ஹாங்காங் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திடம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த எந்த பதிவுகளோ, சாத்திய ஆய்வு குறித்த அறிக்கைகளோ, அரசாங்கம் அங்கீகாரம் அளித்தமைக்கான ஆவணங்களோ இல்லை. இவற்றை அவர்கள் செய்யத் தவறியதால் தான், ஏதாவது…

Read More

சீனா – அமெரிக்கா பனிப்போரில் இலங்கை சிக்கியுள்ளது; சம்­பிக்க ரண­வக்க

”இந்­தி­யாவை பொறுத்­த­வரை அந்த நாடு இலங்­கையின் வடக்கு, கிழக்கை மாத்­திரம் பார்க்­காமல் முழு இலங்­கை­யையும் பார்க்க வேண்டும். மேலும் சீனா­வுடன் எவ்­வா­றான கொள்­கை­யுடன் இலங்கை செயற்­ப­ட­வேண்டும் என்று இந்­தியா கூற முடி­யாது” என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் செயலாளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் எண்­ணங்­களை பார்க்கும் போது அது இலங்­கையில் பாரிய முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்தும். எனினும் இந்த விட­யங்­களில் இந்­தியா இலங்­கையின் அனைத்து பகு­தி­க­ளையும் கருத்­திற்­கொள்ள வேண்டும் என்று ரண­வக்க குறிப்­பிட்டார்….

Read More

இலங்கையின் இனப்பதற்றத்தை உடைக்க அமெரிக்கா உதவும்!

இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் இனப்பதற்றத்தை இல்லாதொழிக்கவும் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் அமெரிக்கா உதவி செய்யும் என்று, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிராந்திய விவகார பணிப்பாளர் நெய்ல் ரோமாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது​ அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முன்னெடுப்புக்கள், ஏதேச்சதிகார அரசாங்கத்தை வீழ்த்திய புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இனப்பதற்றத்தை தவிர்க்க புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்று நெய்ல் ரோமாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Read More