Headlines

4 வயது சிறுமியை தாக்கிய தாய் கைது

க.கிஷாந்தன் நோர்வூட் – போற்றி தோட்டத்தில் 4 வயது சிறுமி ஒருவரை தாய் அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மேற்படி தாயினால் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறித்த சிறுமியின் தாத்தா தெரிவித்துள்ளார். அதன்பின் நோர்வூட் பொலிஸாருக்கு சிறுமியின் தாத்தா செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து…

Read More

ஜெனரல் சரத் பொன்சேகா நிரபராதி: நீதிமன்றம்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரால் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளராக இருந்த முன்னாள் கப்டன் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரசார பணிகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்தியதாக இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சவூதி அரேபியாவில் நாயை கொடுமைப்படுத்தியவர்களுக்கு 5 வருட சிறை

இரண்டு சவுதி இளைஞர்களுக்கு வேலை எதுவும் இல்லாததால் நேரத்தைப் போக்க தங்கள் வீட்டு நான்கு சக்கர வாகனத்தில் ஏறி ஒரு நாயை விரட்டிக் கொண்டு சென்றுள்ளனர். விரட்டியதோடு அல்லாமல் 10க்கும் மேற்பட்ட முறை அந்த நாயை வாகனத்தில் மோதவிட்டு அது வலியில் குலைப்பதை ரசித்துள்ளனர். முடிவில் அந்த நாய் இறக்கும் வரை தொல்லைபடுத்தியிருக்கின்றனர். ஒருவன் காரை ஓட்ட மற்றொருவன் தனது மொபைலில் அதனை படமாக பிடித்துள்ளான். படமாக எடுத்ததோடு மட்டுமல்லாது அதனை இணைய தளத்திலும் பரவ விட்டுள்ளான்….

Read More

மூடப்படுகிறது மத்தள விமான நிலையம்

மத்தள மஹிந்த ராஜபக்ச­ விமான நிலையத்தின் பயணிகள் சேவைகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவுள்ளது என்று தெரியவருகின்றது. கடந்த இரு மாதங்களில் இரு பயணிகளே இந்த விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். விமான நிலையப் பராமரிப்புக்காக மாதாந்தம் 250 மில்லியன் ரூபா செலவிடப் படுகின்றது.

Read More

முஸ்லிம் பெண்கள் இறுக்கமான ஆடையணிவதை நிறுத்தவும் – மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் படையணி

இன்று இலங்கையின் தலைநகர் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் நடைபாதைகளிலும், மோட்டார் வண்டிகளிலும், பார்க்களிலும், பீச்களிலும் எமது முஸ்லிம்களின் ஆடைகளை கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் வந்திருக்கும். அதனை சொல்வதிலும் தடுப்பதிலும் பிற்போக்கு தனத்தை கையாண்டு கொண்டிருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு அன்பான மடல். மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு என்று வெறுமனே அரசியல் பேசுவதற்காக அமைக்கப்பட்ட படையணி அல்ல இது, மாறாக பாவங்களை சொல்லால் அல்லது கையால் தடுப்பதற்காக முன்வந்த ஒரு படையணி என்பதை…

Read More

விலை குறைப்பு செய்யாத வியாபாரிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – அமைச்சர் றிஷாத் பணிப்புரை (photos)

இர்ஷாத் றஹ்மத்துல்லா வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்ட விலைக் குறைப்பு நிவாரணம் மக்களை சென்றடைவது தொடர்பில் கண்டறியும் வகையில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் சதொச கூட்டுறவு தொகுதிக்கு திடீர் விஜயமொன்றினை இன்று (2015.03.09) மேற்கொண்டார். மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சகிதம் இங்கு விஜயம் செய்த அமைச்சர் களஞ்சியசாஉயணலையின் தற்போதைய நிலையினை பார்வைியட்டதுடன்,களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டதுடன்,அதனை உரிய முறையில் பாதுகாப்பாக வைக்குமாறு பணியாளர்களுக்கு பணிப்புரை…

Read More

வேன் மோதியதில் சிறுமி பலி- வேனைத் தீயிட்டுக் கொழுத்திய பொதுமக்கள்

செய்திப் பிரிவு நேற்று மாலை சுமார் 6 மணியளவில் குருநாகலில் இருந்து வந்த வேன் மோதி பாடசாலை மாணவி ஒருவர் பலியாகியுள்ளார். குருநாகலில் இருந்து வந்த வானுடன் குறித்த சிறுமி மோதியதில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாவடிவேம்பைச் சேர்ந்த சிவயோகன் யசோதா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார். இந்தவிபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் வாகனத்தை தீயிட்டு கொழுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

Read More

சர்வதேச சட்டத்தை மதிக்காத இஸ்ரேல் ராணுவம்: யூனிசெப் அறிக்கை….!

பாலஸ்தீனத்திடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட தீவிரவாத நாடான இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என்று யூனிசெப் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக யூனிசெப் வெளியிட்ட அறிக்கையில்…. தடுப்புக்காவல், கண்காணிப்புகள் மற்றும் பரிந்துரைகள் என்ற பெயரில் பாலஸ்தீன குழந்தைகளை நடத்துவதில் இஸ்ரேல் ராணுவத்தினர் சர்வேதேச சட்டங்களை மீறுகின்றது என்று அறிக்கையில் கூறியுள்ளது. 162 குழந்தைகள் கண்களால் கட்டப்பட்டும், 189 குழந்தைகளின் கைகள் இறுக கட்டப்பட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கின்றனர். கைது, சிறை அறை மாற்றம், விசாரணை மற்றும் தடுப்புக்காவலின்…

Read More

ஆசிரியர் உதவியாளர் நேர்முகப்பரீட்சை இன்று

ஆசிரியர் உதவியாளர்  ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை 9, 10, 11ம் திகதிகளில் பதுளையில் இடம்பெறுகிறது. மலையகத்தில் தமிழ்மொழி  ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு   ஆசிரியர் உதவியாளர்களை  இணைத்துக்கொள்வதற்கான  வேலைத்திட்டங்களை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையில் ஊவா மாகாணத்தில் நிலவுகின்ற   ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்கும் பொருட்டு இன்று 9ஆம் திகதியும் 10, 11, 12 ஆம் திகதிகளிலும் பதுளை ஹாலி எலை கல்வி வள நிலையத்தில் நேர்முகப்பரீட்சை இடம்பெறுகிறது.  ஆசிரியர் உதவியாளர்களுக்கான பரீட்சையில்…

Read More

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில் மேற்­கொண்­டுள்ள பதி­வி­லேயே இதனை தெரி­வித்­துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஆர்வம் காட்டி வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். “”எனது இலங்கை விஜயம் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நட்­பு­ற­வினை மேலும் வலுப்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் அமையும். நான் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன்…

Read More

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம்! எச்சரிக்கிறார் வை.எல்.எஸ்.ஹமீட்

ஊடகப் பிரிவு எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்- . புதிதாக நாட்டை ஆட்சிசெய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் தலைமையிலான அரசு, தனது 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசியலமைப்பில் இரண்டு பெரிய மாற்றங்களை செய்வதற்கான முன்னெடுப்புகளை செய்ய திட்டமிட்டு வருகின்றது. அதில் ஒன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அட்சி முறையை மாற்றுவது அடுத்தது தற்போது நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் முறையை மாற்றுவது என்பதாகும். குறித்த இரண்டு மாற்றங்களும் இலங்கையில் வாழும் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான ஒன்றல்ல என்று, அகில இலங்கை…

Read More

அ. இ. ம. கா.வின் பொத்துவில் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவு.

இர்ஸாத் ஜமால் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அ.இ.ம.காங்கிரஸானது தன் சேவையால் வடமாகாணத்தை வென்றதோடு, கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. தேர்தலுக்கு பின்னர் நாடாலாவிய ரீதியில் பொதுக்கூட்டங்களை நடாத்தி கட்சியின் புதிய காரியாலயங்களை திறந்து வரும் அ.இ.ம.காங்கிரஸ் தற்போது அம்பாறை மாவட்டத்திலும் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு வி{யத்தை மேற்கொண்ட அ.இ.ம.காங்கிரஸ் குழுவினர் தற்காவலிகமான மத்திய குழு உறுப்கபினர்களை தெரிவு…

Read More