Headlines

யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 9 ஆம் திகதியிலிருந்து யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

துறைமுக நகர் உடன் நிறுத்தம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், கொழும்பில் சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த துறைமுக நகரத் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சரவைப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்து…

Read More

கண்டி மகிந்த ஆதரவு கூட்டம்..

-Dehianga Azeem M Uzman – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் இணைந்து இன்று மாலை 3 மணி முதல் கண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டத்திற்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் இருக்கும் நிலையில், இப்போதே மக்கள் வந்த வண்ணம் உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்ட ஆவணப்படம் – இந்தியாவில் ஒளிபரப்ப தடை

டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக…

Read More

பேஸ்புக் கருத்தால் அமெரிக்கருக்கு சிக்கல்

பேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தொழிலாளி ஒருவர் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று நம்பப்படுகின்றது. ரயான் பேட் என்ற ஹெலிகாப்டர் மெக்கானிக், சுகயீன விடுமுறையில் புளோரிடாவிலுள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்தபடி தனது முதலாளியை விமர்சித்திருந்தார். அவர் தனது “நிறுவனத்தை முதுகில் குத்துபவர்கள்” என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களின் இனத்தை அவதூறாகவும் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கள் ஐக்கிய அரபு எமிரெட்ஸின் கறாரான அவதூறு…

Read More

பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஆளும் கட்சியாக நாம் மாறுவோம்-நிமல் சிறிபால டி சில்வா

தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முடிவடைந்து பொதுத்தேர்தல் நடக்கும் வரையிலேயே நாம் அமைதியாக உள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஆளும் கட்சியாக நாம் மாறுவோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் முறைமையில் மாற்றம் அவசியமெனவும் வலியுறுத்தினார். தேசிய அரசாங்கம் அமையப் பெற்றதன் பின்னர் புதிய எதிர்க்கட்சி மெளனம் காப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாம்…

Read More

துமிந்தவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை! -ரணில் விக்ரமசிங்க

தான் பிரதமராக பதவியேற்றதும் ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் சிரச ஊடகம் வௌியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என, ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற அமர்வின் போது, சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமரான தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்பட்டுள்ளதோடு, தனது உரிமை மற்றும் வரப்பிரசாதங்களும் மீறப்பட்டுள்ளதாக பிரதமர் நேற்று முன்தினம் (04) பாராளுமன்றத்தில் கூறினார். அதேபோல் துமிந்த சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள…

Read More