Headlines

மக்களே பொறுத்திருங்கள்: நிதியமைச்சர்!

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார். இலங்கையர்களுக்கு ஆகக்கூடுதலான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பமாக இது அமையும். எமது இனத்துக்கு கௌரவமாக சேவையளிப்பதே எங்கள் பொறுப்பாகும். நல்ல எதிர்காலத்துக்காக மாற்றங்களை ஏற்படுத்துவோம். வென்றெடுத்த சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும். ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும். மக்கள்…

Read More

தேர்தலில் எம்மை பலிகொடுத்து பசில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பினால் அவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எந்தவகையிலும் இணைத்துக் கொள்ள வேண்டாம் என கட்சித் தலைமையிடம் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டாரதென்ன கோன் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு முக்கிய காரணம் பசில் ராஜபக்ச என்று தெரிவித்துள்ள ஜனக பண்டார, ”தேர்தலில் எம்மை பலிகொடுத்து பசில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கினார்….

Read More

ஜனாதிபதிக்கு சவூதியின் புதிய மன்னர் வாழ்த்து

A.J.M. மக்தூம் சவூதி அரபியாவின் புதிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலுஸுஊத்,ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்து இலங்கைஜனநாயகசோசலிச குடியரசின் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒருதந்தியைஅனுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னர் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து தந்தியில் தனது சார்பிலும், சவுதி அரேபியா அரசு மற்றும் தனது மக்களின் சார்ப்பிலும் இனிய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள அவர், புதிய ஜனாதிபதியின் முன்னேற்றம்,சுபீட்சம் மற்றும் சந்தோஷத்திற்கும் உடல்நலத்திற்கும்…

Read More

ஊழல் செய்தவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? போகப்போக புரியும்

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் கொழும்பில் நேற்று புதன்கிழமை (28)…

Read More

சிக்கினார் நாமல் – அதிசொகுசு நடமாடும் படுக்கையறையும் சிக்கியது (படங்கள் இணைப்பு)

நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் படுக்கையறை அதாவது ஹோட்டல் கண்டுபிடிக்கப்படுள்ளது. அந்த நடமாடும் விடுதி வாகனத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும் இருக்கைகள் கொண்டவையாகவும் உள்ளது. இந்த பஸ்வண்டியினுள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாதவாறு கறுத்த ஸ்டிக்கரால் கண்ணாடிகள் மறைக்கப்பட்டுள்ளன. பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்றை தனதாக்கி கொண்ட மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஷ தனது சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார். அந்த வாகனத்தையே தற்பொழுது பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

Read More

பட்ஜெட்டில் 3 மடங்குகளினால் விலைகள் குறையும்: அசாத் சாலி

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் கொழும்பில் நேற்று புதன்கிழமை (28)…

Read More

நற்பெயரைக் கெடுக்க சதி வாய்திறந்தார் சங்ககார…

தனது நற்பெயரை கெடுப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கிரிக்கெட் சபைச் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் சதி செய்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார். கிரிக்கெட் செயற்பாட்டுப் பணிப்பாளர் கார்ல்டன் பேர்னாட்ஸுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த வருடம் இடம்பெற்ற சம்பியன் லீக் போட்டித் தொடரின் போது இலங்கையின் கதுரட்ட மெரூன்ஸ் மற்றும் இந்திய ஐ.பி.எல்….

Read More

MH370 விமானம் மாயமான முதலாம் ஆண்டு நிறைவுக்கு முந்தைய தினம் அறிக்கை!

கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மாயமாகி இருந்தது. காணாமற் போன இவ்விமானத்தின் மர்மம் ஏவியேஷன் வரலாற்றிலேயே மிகவும் புதிர் மிக்கதாகவும் இன்று வரை சிறிய ஒரு தடயமும் கிடைக்காத ஒன்றாகவும் பதியப் பட்டுள்ளது. மேலும் இதைத் தேடும் பணியும் விமானவியல் வரலாற்றில் அதிகளவு பணம் செலவழித்துத் தேடப் பட்ட ஒன்றாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்…

Read More

அணித் தலைவர் பதவிக்கும் ஆப்பு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணியின் தலைவராகவும், இளைய மகன் ரோகித ராஜபக்ச சிறிலங்கா இராணுவ ரக்பி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்களை இந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு உயர்மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக…

Read More

எரிவாயு, சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு

பல நகரங்களில் எரிவாயு, மற்றும் சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகின்றது. இடைக்கால வரவு-செலவுத்திட்டம் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அந்த இரு பொருள்களையும் வர்த்தகர்கள் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

Read More