‘பேஸ்புக்கில் எமது சமூகம் ஒன்றிப் போவது நன்மையல்ல’ ஜனாதிபதி மஹிந்த
நாட்டில் இடம்பெறும் நல்லவற்றைப் பாராட்டுவது அரசாங்கத்திற்குச் சாதகமாகிவிடும் என குறுகிய நோக்கில் ஊடகங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டில் நடப்பவற்றில் நல்லவற்றைக் குறைவாகவும் கெட்டவற்றை அதிகமாகவும் வெளியிடுவது ஊடகங்களின் வழங்கமாகிவிட்டது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று மட்டுமன்றி எப்போதும் ஊடகங்கள் அவ்வாறே செயற்பட்டுள்ளன என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் சுட்டிக்காட்டினார். சர்வதேச சிறுவர் தினத்தின் தேசிய நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மஹரகம…
