Headlines

‘பேஸ்புக்கில் எமது சமூகம் ஒன்றிப் போவது நன்மையல்ல’ ஜனாதிபதி மஹிந்த

நாட்டில் இடம்பெறும் நல்லவற்றைப் பாராட்டுவது அரசாங்கத்திற்குச் சாதகமாகிவிடும் என குறுகிய நோக்கில் ஊடகங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டில் நடப்பவற்றில் நல்லவற்றைக் குறைவாகவும் கெட்டவற்றை அதிகமாகவும் வெளியிடுவது ஊடகங்களின் வழங்கமாகிவிட்டது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று மட்டுமன்றி எப்போதும் ஊடகங்கள் அவ்வாறே செயற்பட்டுள்ளன என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் சுட்டிக்காட்டினார். சர்வதேச சிறுவர் தினத்தின் தேசிய நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மஹரகம…

Read More

சஜின் வாஸினால், கிறிஸ் நோனீஸ் தாக்கப்பட்டதற்கான காரணம் சுவாரஸ்யமானது…!

இலங்கை வெளிவிவகார சேவையைசாரத, அரசு தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டாத இராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பிரிட்டனிற்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரிட்டன் தூதுவர் பதவவிலகியதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரித்து தெளிவுபடுத்தப்படுதல் அவசியம். ஏனெனில் இது இலங்கையின் சர்வதேச உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம். அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்த வி;டயங்கள் இந்த விடயத்தில் குழப்பம் நிலவுவதை புலப்படுத்தியுள்ளன. மிகத்…

Read More

முசலி பிரதேச செயலகத்தினால் உருளை கிழங்கு வினியோகம்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி நிலையினை கருத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் 7,500 கிலோ உருளை கிழங்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளினை அடுத்து நேற்று (01) முசலி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது. அதனை அடுத்து முசலி பிரதேசத்தில் உள்ள 21 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் ஒரு குடும்பத்திற்கு 3 கிலோ விகீதம் பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியா பாய்…

Read More

18 வயது முஸ்லிம் இளைஞனை 13 தினங்களாக காணவில்லை

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 476, ஹிழுறியா ஜும்மா பள்ளிவாயல் வீதி, மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு எனும் முகவரியில் வசிக்கும் றவூப் முஹம்மட் சியாம் (வயது 18) எனும் முஸ்லிம் இளைஞனை கடந்த 19.09.2014 திகதி தொடக்கம் இன்று வரை காணவில்லை என அவரின் தந்தை இப்றாஹீம் றவூப் தெரிவித்தார். தனது மகன் முஹம்மட் சியாமை காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 20.09.2014ம் திகதி முறைபாப்பாடு செய்ததாகவும், அவரை கண்டவர்கள் 0779344130 எனும் எனது…

Read More

ஹஜ்ஜுப் பெருநாளுக்காக எதிர்வரும் 6ம் திகதி அரசாங்க, வங்கி விடுமுறை

முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமையை விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான விசேட அரசாங்க சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை (6ம் திகதி) அரசாங்கம் மற்றும் வங்கி விடுமுறையாக்கப்பட்டுள்ளது. துல்ஹிஜ்ஜஹ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஹஜ் பெருநாளை அக்டோபர் 6ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. முன்னர் ஹஜ் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை என குறிப் பிடப்பட்டிருந்ததால் அன்றைய தினமே அரச விடுமுறையாகக் குறிப்பிடப்பட்டது. (TK)

Read More

கிறீன்காட் விஸாவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கிறீன்கார்ட் என பரவலாக அறியப்படும் பல்வகைத்தன்மை விஸா விற்கான 2016ஆம் ஆண்டு லொத் தர் குலுக்கலுக்கான விண்ணப்பங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று இரவு 9.30 முதல் நவம்பர் மூன்றாம் திகதி இரவு 9.30 மணிவரை ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை குறித்த காலப்பகுதியில் www.dvlottery.state.gov ஆலிஸ என்ற இணை யத்தளத்தினூடாக மாத்திரமே சமர்ப் பிக்கமுடியும். இந்த கிறீன்கார்ட் விஸா விண்ணப்பம் தொடர்பான விபரங்களை usvisas.state.gov என்ற இணையத்தளத்தில் Diversity Visa என்ற பகுதியில்…

Read More

தேர்தலுக்கு தயாராகுமாறு சு.கவினருக்கு பணிப்புரை

கே.பாரதிராஜா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புகளால் கொழும்பு அரசியல் களம் பரபரப்படைந்துவரும் நிலையில், தேசிய தேர்தல் ஒன்றுக்குத் தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்க ளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ பணிப்புரை விடுத்துள்ளார் என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டுக்கும் அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களிடையே இடம்பெற்றுவரும் கருத்து…

Read More

மஹிந்தவின் வத்திக்கான் விஜயத்துக்கு பிறகே ஜனாதிபதித் தேர்தல் ஆலோசனை

அ.அருண் பிரசாந்த் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவின் வத்திக்கான் விஜயத்திற்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச் சரவையின் பேச்சாளரும் ஊட கத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வல்ல நேற்று தெரிவித்தார். அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகவிய லாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் 25 வீத மின்கட்டண குறைப்பையும் இதன் போது அமைச்சர்…

Read More

ரணிலிடம் நாம் கற்க வேண்டும் – மஹிந்த தெரிவிப்பு

கே.பாரதிராஜா தோற்றாலும் வெற்றிபெற்று விட்டோம் என்று எப்படிக் கூறுவது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுவிட்டதாக எதிர்க்கட்சி செய்த பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊவா மாகாண ஆளுந்தரப்பினர் பதவிப் பிரமாண நிகழ்வில் உரையாற்றியபோதே மேற்கண்ட வாறு தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ மேலும் தெரிவித்தவை வருமாறு, வட…

Read More

ஊவாவின் முதலமைச்சராக ­சீந்திர சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ­சீந்திர சேனாநாயக்க நேற்றுக்காலை 9.14 மணிக்கு சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன் ஆளுந்தரப்பு உருப்பினர்களும் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். இதேவேளை, ஊவா மாகாண அமைச்சர்கள் நால்வரினதும் பதவிப்பிரமாணம் பிற்போடப்பட்டுள்ளது. வெளிநாடு சென்றுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடு திரும்பியதையடுத்தே இவர்களுக்கான பதவிப்பிரமானத்தை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற…

Read More

பிணை மனு மீண்டும் ஒத்திவைப்பு- ஜெயலலிதா தொடர்ந்து சிறையில்

ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை ஒக்டோபர் மாதம் 7-ம் திகதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை இன்று 10.30 மணியளவில் நடைபெற்றது. நேற்று இரவு அரசு சிறப்பு வழக்கறிஞராக அவசரம் அவசரமாக நியமிக்கப்பட்ட பவானி சிங் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு செய்தார். இதை ஏற்ற நீதிபதி ரத்னகலா, ஒக்டோபர் 7ம் திகதிக்கு ஒத்திவைக்க…

Read More

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் நாடளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதலாம் திகதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது.முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது 2050 ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Read More