Headlines

கப்பல் மூழ்கியதில் 24 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மூழ்கியதால்  குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் கரையோரத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை  இக்கப்பல் மூழ்கியுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படைக் கப்பல்களின் உதவியுடன் சுழியோடிகள் 06 பேரை காப்பாற்றியுள்ளனர். இதன்போது, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை. இக்கப்பலில் சுமார் 40 பேர் இருந்துள்ளதுடன், இவர்களில் அதிகளவான சிறுவர்கள் இருந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது

Read More

3 வயது தங்கையை சுட்டதற்காக மன்னிப்பு கேட்ட 4 வயது சிறுவன்

ஓகியோவில் உள்ள லோரைன் பகுதியில் 4 வயது சிறுவன் தனது 3 வயது தங்கையை துப்பாக்கியால் தலையில் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளீவ்லாந்தில் இருந்து 48 கி.மீ மேற்கில் உள்ள லோரைன் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் 4 வயது சிறுவனும் அவரது 3 வயது தங்கையும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. தன்னிடம் இருந்த .40 கேலிபர் கைத்துப்பாக்கியை கொண்டு தங்கையை விளையாட்டாக மிரட்டிய சிறுவன் எதிர்பாராத விதமாக சிறுமியின்…

Read More

110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி, வபாத்தான அப்துல் ரஹ்மான்

மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான் என்பவர் பஸ் சாரதியாக பணியாற்றி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் சுமார் 110 பயணிகளுடன் நேற்று காலை உதகமண்டலம் நோக்கி மலைப்பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. பஸ்ஸினை அப்துல் ரஹ்மானே செலுத்தியுள்ளார். ஊட்டியை…

Read More

”அலுத்கம சம்பவம் ஒரு நல்ல பாடம் ” பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரான்கீன், கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் மத ஐக்கியம் மற்றும் இலங்கையின் ஏனைய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மத நல்லிணக்கம் அவசியமானது என்ற பிரித்தானிய  அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளும் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அலுத்கமவில் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தை…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளா் யார்? (சிறப்பு நேர்காணல்)

(நேர்காணல் – எம்.ரீ.எம்.பாரிஸ்) ஓட்டமாவடி பிரதேச சபையின்  43வது சபை அமர்வு கடந்த ஓக்டோபர் 30.2014ந்திகதி நடை பெற இருத்த நிலையில் சபை உறுப்பினர்களால் பகிஷ்கரிக்கப்பட்டது இது தொடர்பிலும் அடுத்த தவிசாளர் யார்? என்ற கேள்விக்கு பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் இவ்வாறு ஊடகங்களுக்கு பதில் அளித்தார் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர்களால் பல்வேறு  குற்றங்கள் சுமர்தப்பட்ட இந்நிலையில் தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரோரனையினை கொண்டு வருவதன் மூலம் தவிசாளரை மாற்றி புதிய தவிசாளர்…

Read More

சுனாமி வரவு செலவு திட்டம் -2015

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் வரவு செலவு திட்டம் 2015 பற்றி , இதை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா அவர்கள் சாதாரண மக்களுக்கும் விளங்கும் மொழியில் இதை ஒரு சுனாமி வரவு செலவு திட்டம் என வர்ணிக்கிறார் . சுனாமி அனர்த்தம் நீங்கள் எல்லோரும் அறிந்தது , அதாவது கடல் தன்னை உள்வாங்கி பின்னேர் சீறிப் பாயும் . இதே போல்தான் முதலில் உங்களுக்கு ஆனந்தமாக இருக்கும் , ஆனால் சிறிது…

Read More

தலைவர் ஹக்கீம்,செயலாளர் ஹசன் அலி இற்கிடையிலான முறுகல் அரசாங்கத்திற்கு மு.கா சிவப்புக் கொடி காட்டுவதற்கான சமிஞ்சையா..??

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ஜனாதிபதித் தேர்தலில் மு.கா யாரை? ஆதரிப்பது என்பதில் மிகப் பெரிய சாவாலை எதிர் கொண்டு வருகிறது.இவ் அரசாங்க ஆட்சிக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் காரணாமாக முஸ்லிம்கள் தற்போதைய அரசின் மீது வெறுப்படைந்துள்ளதனால்,அரசை ஆதரிப்பது தங்கள் தலை மீது தாங்களே  மண்ணை அள்ளிக் கொட்டும் செயலாய் அமைந்துவிடும் என்ற காரணத்தினாலும்,அரசின் செயற்பாடுகளை பொருந்திக்கொள்ள முடியாமையினாலும் அரசை விட்டு மு.கா வெளியேற வேண்டும் என்பதில் மு.கா உறுப்பினர்கள் பலர் உறுதியாக உள்ளனர்.இவ் விடயத்தில்…

Read More

சிலாவத்துறையில் வெள்ளப்பெருக்கு – ரிப்கான் பதியுதீன் துரித நடவடிக்கை

ஏ.எச்.எம் பூமுதீன் மன்னார்- சிலாவத்துறை பிரதேசத்தில் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து ஸ்தலத்திற்கு உடன் விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், அங்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளார். முள்ளிக்குளம், பாலைக்குளி, கரடிக்குளி ,காயாநகர் போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பது குறித்தும் அதிகாரிகள் ,கடற்படை மற்றும் இராணுவத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். கல்லாத்து பாலத்தின் மேலாக நீர் பாய்ந்து ஓடுவதால் மேற்படி கிராமங்களுக்கான போக்குவரத்தில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நாளை…

Read More

மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் ஆய்வு மூலம் கண்டுபிடிப்பு

கொஸ்லாந்த மீரியபெத்தயில் மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் அங்கு வசித்த மக்கள் அப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மரக்கறி உற்பத்தி செய்தமையே என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இற்றைக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஓரிடம் என எல்லையிடப்பட்டு தூண்களும் நடப்பட்டு இலக்கமிடப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பேராதனை பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானப் பேராசிரியர் கபில தஹநாயக்கா, மேல் நீர்பரப்பு பாதுகாப்பு திட்ட முன்னாள் பணிப்பாளரும் சுற்றாடல் ஆய்வாளருமான…

Read More

பதுளை கொஸ்லாந்தை மண்சரிவு! சத்திய வாக்குமூலம்

மண்சரிவில் 400 பேர் வரை காணாமல்போனதாக கூறப்பட்டாலும், இதுவரையில் 6 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில், 2005ம் ஆண்டிலிருந்து மலை வெடித்து இருந்தது. வேறு இடத்திற்கு எழும்புமாறு கூறியிருந்தார்கள். ஆனால் வீடு கொடுக்காமல் இந்த மக்கள் எங்கே போவது. மக்கள் புதையுண்ட இடத்தில் தோண்டால் இராணுவத்தினர் வேறு இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார். 5 அடி ஆழத்தில் தான் புதையுண்டு இருப்பார்கள் என அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்….

Read More

காலங்கடந்தாலும் சாட்சியங்கள் ஏற்கப்படும்

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு விற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண் டிய கால எல்லை முடிவடைந்துள்ள போதிலும் காலம் பிந்தி சமர்ப்பிக் கப்படுபவற்றை ஏற்றுக்கொள்ள தயார் என மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் களின்படி, ஒக்டோபர் 30 திகதி யுடன் ஆதாரங்கள் போன்றவற்றை சமர்ப் பிக்க வேண்டும்.தனக்கு கிடைத்த தகவல்களை குழு ஆராய்வதற்கு இலகுவாகவே இந்த…

Read More

சிக்கினார் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடமிருந்து  7000 ரூபாவை லஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை மோட்டார் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வழக்குத் தொடராமல் இருப்பதற்காக இவ்வாறு லஞ்சமாக 7000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டதாக அரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் லஞ்ச ஊழல் தவிர்ப்பு விசாரணைப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More