Headlines

மஹிந்தவின் ஆட்சிக்கு அத்துரலியே ரத்ன தேரர் அதிருப்தி!

தேர்தலில் மகிந்தவின் ஜாதகத்தை விட மக்களின் ஜாதகம் பலமானது எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் ஜாதகத்தை பலப்படுத்தும் அளவுக்கு நாட்டு மக்கள் துரதிஷ்டசாலிகள் இல்லை. தற்போது எமக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு வரையறைப்படாது, அதில் இருந்து தூரச் சென்று அந்த சிறைகளில் இருந்து விலகி, மக்களுக்காக முன்னோக்கி செல்லும் யுகம் உருவாகியுள்ளது. தேசிய பொருளாதாரத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட மகிந்த சிந்தனை இன்று அதனை…

Read More

துருக்கி பள்ளிகளில் குர்ஆன் அடிப்படை பாடம்

கான் பாகவி துருக்கி பெயரளவில் முஸ்லிம் நாடு. ஆனால், இஸ்லாம் அரசாங்கத்தில் இல்லை. அண்மைக் காலமாக மாற்றங்கள் தெரிகின்றன. துருக்கி பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இப்போது அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறே பள்ளிகளில் திருக்குர்ஆன் கற்பிக்கப்படும் என்ற முடிவையும் அரசு எடுத்துள்ளது. திருக்குர்ஆனைக் கற்கவும் விளங்கவும் ஏதுவாக அரபிமொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படும். இதன் மூலம் பல்கலைக் கல்வி எளிதாகும்; அடுத்த தலைமுறை அரசியல் மாற்றங்களையும் இறைவேதத்தின் சரியான விளக்கத்தையும் புரிந்துகொள்ள இயலும். இப்போது பதவிக்கு வந்துள்ள துருக்கி…

Read More

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் ….

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் 50,000 மாணவர்கள் தேசிய அடையாள அட்டை பெற வேண்டியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மூவாயிரம் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பத்தில் பிழைகள் இருப்பதால் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. மேலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகளும் இருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

மகிந்தவின் முட்டாள்தானமான வேலை – ரணில் கேலி

மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழக்கொன்றை தாக்கல் செய்யாது, உயர்நீதிமன்றத்தில் ஆலோசனை தீர்ப்பை கோரியிருப்பது பெரிய முட்டாள்தனம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தான் மகிந்த ராஜபக்ஷ இடத்தில் இருந்திருந்தால் அப்படியான கேள்வியை கேட்டிருக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 18வது திருத்தச் சட்டத்திற்கு அமைய மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட தடையிருக்கின்றதா என ஜனாதிபதி உயர்…

Read More

அக்ஸா பள்ளிவாசலுக்கு அருகில் கதிகலங்கும் இஸ்ரேல்

அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்ற மோதலை அடுத்து nஜரூசலம் நகரில் பலஸ்தீனர் ஒருவர் காரை மோதவிட்டு நடத்திய இரண்டாவது தாக்குதலில் மூன்று இஸ்ரேல் படையினர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பலஸ்தீன இலக்க பலகையுடன் மிகப்பெரிய வர்த்தக வாகனம் ஒன்றே மோதிக்கொண்டு தப்பிச் சென்றதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் லூபா சமரி குறிப்பிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை nஜரூசலத்தில் வாகனத்தை மோதவிட்டு நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் இஸ்ரேல் எல்லைப் பொலிஸார்…

Read More

முஸ்லிம்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர் – ஹசன் அலி

முஸ்லீம்களின் தனி மாவட்டக் கோரிக்கை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்றிருந்தது. அனைத்து முஸ்லிம்களையும் தலிபான்களாகவும், அல்கைதாகவும் பள்ளிவாசல்களை…

Read More

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் மந்திரியின் கால்

வாகா எல்லைப் பகுதிக்கு இன்று வந்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கவனக்குறைவாக இந்திய பகுதிக்குள் அடியெடுத்து வைத்துவிட்டார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் உள்ள பாகிஸ்தான் பகுதியில் கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவருமான ஷா மஹ்மூத் குரேஷி சம்பவ இடத்தை இன்று பார்வையிட்டு, அங்குள்ள பாகிஸ்தான் ரேஞ்சர் படையினரிடம் விசாரித்து அனுதாபம் தெரிவித்தார். பின்னர்,…

Read More

ஐக்கிய முஸ்லிம் கட்சியில் இணையும் சட்டத்தரணி ஏ.எம் முஜீப்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் கிழக்கு மாகாணத்தை மையப் படுத்தி பொறியியலாளரும், பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் யூ.கே நபீர் தலைமையில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய முஸ்லிம் கட்சியானது எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எழப் போகும் சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுக்கும் நோக்குடன் பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள், புத்தி ஜீவிகளை தங்களோடு இணைக்கும் அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.அந்த வகையில் பிரபல சட்டத்தரணியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும்இமுன்னாள்…

Read More

சர்வதேச ரீதியாக அங்கிகாரம் பெறும் அ.இ.ம.கா வும் அதன் தலைமையும்

ஏ.எச்.எம். பூமுதீன் இலங்கையில் தேசிய அளவில் அகல கால்பதித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிநாமமாக சர்வதேச ரீதியில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கட்சி கால்பதித்துள்ளது. இலங்கையில் – பொதுவாக தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலும் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் கட்சியும் கடசியின் தேசியத் தலைமையான அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பெற்று வரும் நல்ல அபிப்ராயத்தை அடுத்தே சர்வதேச ரீதியாக வாழும் இலங்கையர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து கொள்வதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்துள்ளது….

Read More

எயிட்ஸ் – மாணவர்களே அவதானம்!

எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போதே, இந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலைகளிலும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே கூறியுள்ளார். இதன்படி உயர் கல்வி…

Read More

இலங்கையின் ஐ.நா. மீதான தாக்குதலுக்கு ட்விட்டர் மூலம் எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு ஒத்துழைப்ப வழங்கும் தரப்பினரை மௌனப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான அமெரிக்கப் பிரதிநிதி கீத் ஹார்பர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்  பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினரை அடக்கி ஒடுக்குவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீதான தாக்குதலுக்கு நிகரானது. இதனை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

18ம் திருத்தச் சட்டத்தில் பாரிய பிழைகள்; ரணில் குற்றச்சாட்டு

18ம் திருத்தச் சட்டத்தில் பாரிய பிழைகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு சிறப்பு தேர்ச்சி அவசியம்.இந்த தேர்ச்சி இல்லாத பட்சத்தில் அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது. தற்போது அதுதான் நடந்திருக்கிறது. 18ம் திருத்தச்சட்டம் தயாரிக்கப்படும் போது பல்வேறு எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. எனினும் அவற்றில் குழப்ப நிலை உருவாகி இருக்கிறது. இந்த குழப்ப நிலைகள்; விரைவில் வெளியில் வரும் என்று ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More