ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதால் அரசாங்கம் பலவீனமடையாது
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதால் அரசாங்கம் பலவீனமடையாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது அரசாங்கத்திலுள்ள எந்தக் கட்சிக்கும் அந்தக் கட்சிகள் விரும்பிய முடிவு எடுக்க உரிமையுள்ளது. ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த யோசனைகள் குறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆழமாக ஆராய்ந்தது. அதிலுள்ள…
