மறிச்சிக்கட்டி, மரைக்கார்தீவு காணிகள் வில்பத்து சரணாலயத்துக்குரியதல்ல- அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
முசலி பிரதேச செயலகத்துக்குரிய மறிச்சிக்கட்டி மரைக்கார்தீவு பகுதியில் 73 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ள காணி வில்பத்து சரணாலயத்துக்குரிய பாதுகாப்பு பிரதேசம் என்பது நீதிமன்றத்தில் உறுதியானால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறு வெளியேறும் 73 குடும்பங்களுக்கும் மாற்றுக் காணிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வில்பத்து சரணாலயத்தின் எல்லை மோதரகம் ஆறு என்ற ஆற்றுடன் முடிவடைகிறது. அதற்கு வெளியே முசலி பிரதேச செயலகத்துக்குரிய மறிச்சுகட்டி,…
