தரம் 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று!
அப்துல்லாஹ் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று நாடு பூராகவும் இடம்பெறுகின்றது. நாடு பூராகவும் 2870 பரீட்சை மத்திய நிலையங்களில் 335585 பரீட்சார்த்திகள் இன்று இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார். பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம், பரீட்சார்த்திகளுக்கும், பெற்றோருக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. விடை எழுதுவதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் தொடர்பாக மாணவர்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும். பகுதி ஒன்று வினாப்பத்திரம் 45 நிமிடங்களை உள்ளடக்கியதாகும்….
