Headlines

ISIS க்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்த ஈரான் – அயதுல்லா கமேனி பச்சைக்கொடி…!

ஈராக்கின் வடபிராந்தியத்தில் ஐ.எஸ் க்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிடுவதற்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈராக் மற்றும் குர்திஷ் படையினருக்கு ஒத்துழைக்குமாறு தமது உயர்மட்ட கட்டளைத் தளபதிகளுக்கு ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனி அதிகாரம் அளித்துள்ளார். ஈராக்கில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு பாரம்பரியமாக ஈரான் எதிர்ப்பையே வெளியிட்ட வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் அமெரிக்காவின் உதவியுடன் ஈரானுக்கு ஆதரவான சியா படையினர் மற்றும் குர்திஷ் படையினர் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து…

Read More

ISIS க்கு இலங்கையின் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் கண்டனம்

ISIS க்கு, இலங்கையின் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில்  கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் கவுன்சிலின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதை ஏற்க முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக இவ்வாறான குற்ற செயல்களை நிறுத்துமாறு ஐ.எஸ். வாதிகளின் தலைவரான அபூ பக்ரால் பக்டாடியை சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

Read More

இமாம் சுதைஸ் இரத்த தானம் வழங்கினார்..!

இந்த வருட ஹஜ் புனித கடமைக்கு வரும் லட்சக்கணக்கான ஹாஜிகளின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக ஐந்து நாள் இரத்த தான முகாம் நடந்தது. இந்த நிகழ்வில் புனித மெக்கா பள்ளியின் இமாம் சுதைஸ் அவர்கள் தனது இரத்தத்தையும் கொடுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார். இது போன்ற இரத்ததான முகாம்கள் ரியாத், ஜெத்தா, தம்மாம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டு தேவைக்கு அதிகமாகவே இரத்தம் சேமிக்கப்படுகிறது. இந்த முகாமை வருடாவருடம் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பு வெற்றிகரமாக…

Read More

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் – கனடா பிரதமர்

 மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்போவதாக கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் கூறினார்.பிரித்தானியாவின் லண்டன் நகரில்,  உரை நிகழ்த்திய அவர், பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தால் மோசமாக நடத்தப்படுவதாக கூறினார்.ஐஎஸ் வாதிகளின் ஆட்சியில் இருக்கும் பிரதேசம், பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதற்கான பெரும் தளமாக மாறலாமென கூறிய அவர், அந்த நிலையில் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாதென தெரிவித்தார்.இதேவேளை, ஈராக்கிற்கு முற்கூட்டியே அறிவிக்கப்படாத பயணம் ஒன்றை மேற்கொண்ட கனேடிய வெளியுறவு அமைச்சர்…

Read More

கத்தாரில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் இருவர் மாயம்

 நேபாள வம்சாவளி பிரிட்டிஷ் நாட்டவர்களான கிருஷ்ணா உபாத்யாயா(52), குன்டேவ் கிமிரே(36) ஆகியோர் கத்தாரில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய்ச்சி செய்துவந்தனர். நார்வேயைத் தலைமையகமாகக் கொண்ட உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான குளோபல் நெட்வொர்க் நிறுவனத்திற்காக கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இவர்கள் அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.வரும் 2022ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்த உள்ளதால் அங்குள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவு வேலை வாங்கப்படுவதாக எழுந்த விமர்சனங்களைத்…

Read More

அல்கொய்தா இந்தியாவுக்கு எதிரான மிரட்டல் அல்ல

அல்கொய்தா இயக்கம் இந்தியாவில் தனது கிளையை தொடங்குவதாக அறிவித்து இருப்பது பற்றி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கெய்ட்லின் கெய்டன் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், நிருபர்களிடம் கூறுகையில், இது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை- என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘அல்கொய்தாவின் இந்த புதிய அறிவிப்பை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. இது தொடர்பான தகவல்களை கவனித்து வருகிறோம். இது இயக்கங்களிடையேயான போட்டியாக கருதுகிறோம். மேலும் அமெரிக்கர்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் கருத…

Read More

தேசிய கீதம் தமிழ் மொழியில் படப்பட வேண்டும்- ரவூப் ஹக்கீம்

தேசிய கீதத்தைக் கூட நாங்கள் இன்னும் ஒரே மொழியில் படித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலைமை இருப்பது வருந்தத்தக்க விடயம், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என   நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாங்களாக இருக்கிற ஒரு மாகாண சபையில் கூட இரண்டு மொழிகளிலும் இசைப்பதற்கு நாங்கள் துணிய வேண்டும். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அது உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம். என்னைப் பொறுத்தமட்டில் நாங்கள் துணிகரமாக…

Read More

விசமானது உணவு; ஆபத்தான நிலையில் 60 பேர் வைத்தியசாலையில்

இலங்கை சுதந்திர வர்த்தக வலயங்களில் ஒன்றான கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, விஷமாகியதில் 60 பேர் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவே விஷமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

Read More

அல்-கொய்தாவின் மிரட்டல்- இலங்கை அரசு தீவிர கவனம்

இந்திய துணைக்கண்டத்திலும் அல்-கொய்தா அமைப்பின் பிரிவை அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அல்-கொய்தா, தீவுக்குள் நுழைவதை தடுப்பதற்கு விஸா கட்டுப்பாடுகள் மற்றும் விஸா மீளாய்வுகளை இலங்கை பரிசீலிக்க உள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல்-கொய்தா ஆதரவு, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., ஈராக்,சிரியா ஆகிய…

Read More

39ஆவது சட்டமா அதிபரின் 7ஆவது சிரார்த்த தினம்

நாட்டின் 39ஆவது சட்டமா அதிபராக பதவிவகித்த மறைந்த கே.சி.கமலசபேஷனின் 7ஆவது சிரார்த்த தினம், சட்டக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் சட்டமா அதிபர் பாலித்த பெர்னண்டோ பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக வருகைதந்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Read More

முதியோர் தினத்தில் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

முதியோர் தினத்தை முன்னிட்டு கைதடி முதியோர் இல்லத்தில்  கடந்த 60 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.எதிர்வரும் 1 ம் திகதி முதல் 7 ம் திகதி வரை முதியோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவர்கள் முதியோர் இல்லத்துக்கு இவர்கள் ஆற்றிய சேவைகள்  நினைவு கூரவுள்ளதாக இல்லத்தின் பணிப்பாளர்  கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

Read More

குற்றவாளியை தண்டிக்கும் அதிகாரம் மகிந்தவுக்கே – மெக்ஸ்வெல் பரணகம

இலங்கையில் இடம்பெற்ற  போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் சட்ட மா அதிபருக்குமே காணப்படுகின்றது என காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்ற செயல்கள் தொடர்பில் உயர் நீதிமன்ற நீதவான்கள் விசாரணை நடத்த உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடையாது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்…

Read More