Headlines

2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்களாக எபோலாவுடன் போராடிய மருத்துவ குழு – TIMES பத்திரிகை

டைம்ஸ் பத்திரிகை (Time magazine) இவ்வருடத்துக்கான (2014) மிகச் சிறந்த நபர்களாக மேற்கு ஆப்பிரிக்காவில் தாம் ஓர் ஆட்கொல்லி நோயால் தொற்றப் பட்டு மரணமடைவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்ற போதும் தமது உயிரைப் பொருட் படுத்தாது எபோலா நோயால் பாதிக்கப் பட்ட ஆயிரக் கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதனால் மரணித்த மேலும் இன்னமும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து டாக்டர்கள் மற்றும் மருத்துவத் தாதியர்களையும் தேர்வு செய்து கௌரவப் படுத்த முடிவு செய்துள்ளது. இது…

Read More

அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்

கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டை ஒப்படைப்பதன் மூலம் மைத்திரிபாலவோ,  ரணில் விக்ரமசிங்கவோ, சம்பிக்க ரணவக்கவோ வெற்றியீட்டப் போவதில்லை. உண்மையான வெற்றி மக்களுக்கே கிடைக்கும். ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியினால் மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். மைத்திரிபால வெற்றியீட்டியதன் பின்னர் பெப்ரவரி மாதமளவில் அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும். சம்பள உயர்விற்கான பொறிமுறைமை உருவாக்கப்படும் வரையில்…

Read More

கட்சித் தாவல்களை தடுக்க கடும் முயற்சி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இறுதியாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சித் தாவக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கட்சித் தாவுவதனை தடுக்கும் நோக்கில் கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 1.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவும், ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவும்…

Read More

சந்திரிக்கா கலந்து கொண்ட கூட்டம் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கலந்து கொண்ட கூட்டம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கண்டியில் தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதனால் தனியார் விடுதியின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

மறுத்தது இந்தியா, கொடுத்தது சீனா

இந்தியாவில் மருத்துவ கல்வியைத் தொடர தடைவிதிக்கப்பட்ட அகதி மாணவி நந்தினிக்கு சீனாவின் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சையில் (பிளஸ் – 2) சித்தியெய்தி மருத்துவ கல்விக்குத் தெரிவானார். இருப்பினும் இந்திய மருத்துவ சபையின்  சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவ கல்வி கற்க முடியாது,என்பதனால் பொறியியல் கல்வியைக் கற்க முடியுமென கூறப்பட்டது. ஆனால் அதற்கு…

Read More

ஐ.தே.கவை ; கேலி செய்யும் திஸ்ஸ அத்தநாயக்க!

ஐக்கிய தேசியக் கட்சியின் பரப்புரை இயந்திரம் “சுவிச் ஓவ்” செய்யப்பட்டுள்ளது. அதன் சாவியைத் தேடி எடுக்கவே மைத்திரிபால சிறிசேனவுக்குப் பல மாதங்களாகும் என்று தெரிவித்தார், அரசு பக்கம் தாவிய ஐ.தே.க முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் முதலாவது பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் சர்வதேச சக்திகளே உள்ளன. அவரின் வெற்றி…

Read More

விமான விபத்து; நான்கு பேர் பலி (இரண்டாம் இணைப்பு)

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் விமானப்படையின் பேச்சாளர் கீதன் செனவிரட்ன தெரிவிக்கையில், ரஸ்யாவின் தயாரிப்பான அன்ரனோவ் 32 ரக விமானம் இன்று காலை கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பறப்பில் ஈடுபட்டிருந்தது. இது ஐந்துபேர்…

Read More

கொழும்பில் விமான விபத்து (படங்கள் இணைப்பு)

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.  அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை…

Read More

ஹிருனிகாவுக்கு அச்சுறுத்தல்!

அஸ்ரப் ஏ சமத் மேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிக்கா தனது தாயுடன் உடன் வெளிநாடு சென்றுள்ளார். முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி எனது தங்கை ஹிருனிக்கா எதிர்க்கட்சியில் சேர்ந்தாதல் அரசாங்கத்திலிருந்து பல இன்னல்களையும் கஸ்டங்களையும் அவருக்கு ஏற்படுத்துகின்றனர். இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் அவர் சிலநாற்களின் பின் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் மீண்டும் இலங்கை வருவார். அத்துடன் எனது உயிருக்கும் அச்சுருத்தலாக உள்ளது. எனது வீட்டுக்கு எஸ.டி.எப். மற்றும் சீறுடை…

Read More

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம்களது அபிலாசைகளும் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

அஸ்ரப் ஏ சமத் இன்று பி.பகல் 03.30மணிக்கு எதிர்கட்சித் தலைவரும் ஜ.தே.கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகையிர், பேராசிரியர் றிஸ்வி சரீப் சட்டத்தரணி இல்யாஸ், தலைமையிலான குழுவினர் எதிர்க்கட்சி தலைவர் அழுவலகத்தில வைத்து முஸ்லீம்களது பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினார்கள்;. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லீம்களது அபிலாசைகளும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உட்படுத்தல் வேண்டும். ஏன இக் குழு கோரிக்கை விடுத்தனர் அத்துடன் வடக்கு முஸ்லீம்களது மீளக் குடியேற்றல் ஒரு குறிப்pட்ட தினத்தில் அவர்களது பிரச்சினைகளுக்கு…

Read More