Headlines

சவால்களை முறியடித்து மேலும் வன்னியை அபிவிருத்திக்கு இட்டுச்செல்வேன் – அமைச்சர் ரிசாத்

ஏ.எச்.எம்.பூமுதீன் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நிம்மதியான சந்தோசமான வாழ்வுக்காகவும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதீயுதீன், இச்சவால்களை முறியடித்து முன்னேற அனைவரையும் ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் இலவச சாரதி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வில் , பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு…

Read More

அலிகார் அஹதியா பாடசாலையின் 11ம் ஆண்டு நிறைவு விழா – பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்

ஏ.எச்.எம்.பூமுதீன் அலிகார் அஹதியா பாடசாலையின் 11ம் ஆண்டு நிறைவு விழா இன்று 02 புத்தளம் ஹதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சர் ரிசாத் பதியுதீன்  பாடசாலை மணவர்ககு பரிசில்களை வழங்குவதையும் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.

Read More

புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா(படங்கள்)

பழுலுல்லாஹ் பர்ஹான் சர்வதேச சிறுலர் தினத்தை முன்னிட்டு புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா 31-10-2014 நேற்றுவெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மற்றும் புதிய காத்தான்குடி அபிவிருத்தி மத்திய குழு ஆகியவற்றின் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.பாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்;டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்;புல்லாஹ் கலந்து கொண்டார்….

Read More

பள்ளிவாசல் சுவர் விழுந்து ஒருவர் வபாத், 3 பேர் காயம்

திருகோணமலை கணேஷ் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாயலின் பழைய கட்டடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரவித்தனர். இன்று காலை(1) இடம்பெற்ற இச் சம்பவத்தில், நவாஸ்- சாஹிபு (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிவாயலில் புதிய கட்டட மொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டடத்தை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. இதன் போதே…

Read More

ஆதரித்து ஏதாவது பிடிங்கிக் கொள்ள மு.கா முயற்சிக்கலாம் அல்லவா?

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 2015 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க உள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது.நிபந்தனை அற்ற ஆதரவு என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்.கிழக்கு மாகாண சபையில் அரசுடன் மு.கா  செய்து கொண்ட எந்த ஒரு விடயத்தையும் இது வரை காலப் பகுதியில் அரசு  நிறை வேற்றியதாக அறிய முடிய வில்லை. நிலைமை இவ்வாறு இருந்தும் மு.கா இனது போக்கு…

Read More

வரவு-செலவுத் திட்டம் 2015 : 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றபோது. அதற்கு  ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதன்படி இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More