பெரும் அவலம்: மலையகம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்!
புருஜோத்தமன் தங்கமயில் அபாய அறிவிப்புக்கள் விடுக்கப்படுவதால் மாத்திரம் உயிரிழப்புக்களைத் தவிர்த்துவிட முடியும் என்றால், இந்த உலகம் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கும். யுத்த சூனிய வலயம் என்று அறிவித்துவிட்டு அதற்குள்ளேயே குண்டு மழை பொழிவதுதான் நவீன உலகின் போர் தர்மம். எப்போதுமே, அபாய அறிவிப்புக்கள் மாத்திரம் பதியப்படும். அதற்கான அடிப்படைகளைக் பேணுவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்றைக்கும் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அதுதான், பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் நேற்று புதன்கிழமை (ஒக்டோபர் 29) காலை இயற்கையின் பெயரினால் மண்சரிவு…
