Headlines

சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது: சூறா சபை

பொதுபலசேனா அமைப்பும் மியான்மர் நாட்டின் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான  989வும் இலங்கையினுள் இணைந்து செயற்படப் போவது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தேசிய சூறா சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய சூரா சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொதுபலசேனா அமைப்பு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் மாநாடொன்றை நடாத்தியது. அம்மாநாட்டைத் தொடர்ந்து இந்த இரண்டு முஸ்லிம் விரோத தீவிர வாதக் குழுக்களும் ஒன்றிணைந்து…

Read More

பாம்பை தேடும் ஞானசரர் !

“இலங்கைக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையானது நாட்டுக்குள் பயங்கரமான சூழ்நிலை உருவாகும். எனவே, அரசாங்கம் படையினரையும் உளவுப் பிரிவினரையும் உஷார்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் பொது பல சேனா இந்நிலை ஏற்பட ராயப்பு ஜோசப்பே காரணமாகும். எனவே, அவரை கைது செய்ய வேண்டுமென்றும் தெரிவித்தது. கொழும்பில் கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனா அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு…

Read More

அவுஸ்திரேலியாவிலிருந்து 20.000 மாடுகள் இலங்கை வருகின்றன

இலங்கையில் பால் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன் கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் அவுஸ்திரேலிய கால்நடை நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்கொட் பேரெட்வேட் இடையே உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைதிட்டத்துக்கிணங்கவே அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000  பசுக்கள் இறக்குமதி…

Read More

அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர்;மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அரசியல்வாதி

மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர், 2002 இல் செய்யப்பட்ட கொலைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. அப்போது, ஆட்சியிலிருந்த மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதியாக அவர் 1998 தொடக்கம் 2002 வரையான காலப்பகுதியில் நீர்கொழும்பு மாநகரசபை  உறுப்பினராக இருந்துள்ளார். நால்வருடன் சேர்ந்து 2002 இல் ஒரு முஸ்லிம் வர்த்தகரை கொலை செய்த இவர், நாட்டை விட்டு ஓடினார்….

Read More

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் UNP செயற்திட்ட குழு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் செயற்திட்ட குழு இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்  மாலை 3 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவால் செயற்திட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் 20 பேர் இக்குழுவில் அடங்குகின்றனர். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் செயற்படவேண்டிய விதம்…

Read More

பொது பல சேனாவின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்! ACJU சார்பாக BBS உடன் SLTJ விவாதிக்கத் தயார்!

(sltj) கடந்த 28.09.2014 அன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற பொது பல சேனா அமைப்பின் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாம் தொடர்பாகவும், இந்த உலகுக்கு இறைவனால் அருளப் பெற்ற இறுதி வேதமான திருமறைக் குர்ஆனின் கருத்துக்கள் தொடர்பாகவும் பலவிதமான விமர்சனங்களும், இனவாததத்தை ஊக்குவிக்கும் விதமான கருத்துக்களும் பகிரங்கமாக வெளியிடப்பட்டமை தாங்கள் அறிந்ததே. பொது பல சேனாவின் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும், திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்…

Read More

ஜாதிக ஹெல உறுமயவுக்குள் வெடிக்கும் முரண்பாடு!

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கடந்த தினத்தில் முன்வைத்த உத்தேச 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்ததின் சில சரத்துக்கள் தொடர்பில் தமது கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த கட்சியின் ஊடக பேச்சாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஸாந்த ஸ்ரீ வர்ணசிஙக தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் 19ஆம் திகதி மஹரகமவில் இடம்பெறவுள்ள கட்சியின் பொதுச் சபை கூட்டத்தின் போது நாட்டின் தற்போதைய நிலமைகள், ஜாதிக ஹெல…

Read More

காடையர்களினால் சேதமாக்கப்பட்ட தர்காநகர் பள்ளிவாசல் இன்று திறப்பு!

மர்லின் மரிக்கார்’ அளுத்கம, தர்காநகர் கலவரத்தின்போது சேதமடைந்த தர்காநகர், மரிக்கார் வீதி வீட்டுத் திட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு 17ம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு அஸர் தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வைபவத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன பிரதம அதிதியாகவும் மேற்கு இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஒபேமெதவல கெளரவ அதிதியாகவும் கலந்து கொள்ளுகின்றனர். இவ்வைபவத்தில் இப்பிரதேசத்திலுள்ள கந்த விகாரை, நாகந்த பெகொட, அம்பகஹகந்திய, மாலெவன்கொட,…

Read More

உண்மையில் நான் வெட்கப்பட்டேன் – முன்னாள் பிரதம நீதியரசர்

கடந்தகால செயற்பாடுகளை நினைத்து வெட்கப்பபடுவதாக நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சியினால் இந்த கரத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சாதாரண குடிமகனாக அன்றாட தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நான் நரஹேன்பிட்டி பொது சந்தைக்கே செல்வேன். பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலத்திலும் பையை எடுத்துச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வது எனது வழக்கமாகும். அனுரகுமார திஸாநாயக்க அவர்களே, இவ்வாறு அண்மையில் நான்…

Read More

15 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த 6 இளைஞர்கள் கைது – களுத்துறையில் சம்பவம்

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   தொடங்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியநபர்கள் அதனை ஒளிப்பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர்.   மாணவி தனது காதலுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை காட்டி மாணவியை அச்சுறுத்தியுள்ள இளைஞர்கள் சிலர், அவரை தமது நண்பர்களுடன் இணைந்து விடுதி ஒன்றுக்கு அழைத்துச்…

Read More

சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அனுசரணையில் 150 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

எ.எச்.எம்.பூமுதீன் சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அனுசரணையில் எஸ்.எம்.எம் ஹூஸைன் நம்பிக்கை நிதியம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கவுள்ளது. கா.பொ.த சாதரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வறிய மாணவர்களுக்கு இப்புலமைப் பரீசில் வழங்கப்படவுள்ளது. இம்முறை 150 மாணவர்கள் இப்புலமைப் பரீசிலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாசார நிலைய மர்லின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் வனிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருமான…

Read More

வடபகுதி செல்லும் வெளிநாட்டவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

BBC Tamil தேசிய பாதுகாப்புக்கு சிலரால் குந்தகம் ஏற்பட்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கையின் வடபகுதிக்குச் செல்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்று வர வேண்டும் என்ற புதிய விதிமுறை, வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அங்குள்ள படையதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வந்து, வடபகுதிக்குச் செல்ல முயன்ற வெளிநாட்டவர்கள் பலர், முன் அனுமதி இல்லாத காரணத்தினால் கடந்த சில தினங்களாக ஓமந்தை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து, அவர்கள்…

Read More