Headlines

முசலி நவீன நகர திட்டமிடல் அமைச்சர் ரிஷாத் கொழும்பில் முக்கிய பேச்சு

மன்னார் – முசலி பிரதேசத்தை நவீன நகராக மாற்றியமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க  நகர அபிவிருத்தி அதிகார சபை இன்று விஷேட குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும்  – நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்குமிடையில் இன்று கொழும்பில் இடம் பெற்ற விஷேட சந்திப்பை அடுத்தே குறித்த குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தம் காரணமாக மிக மோசமாக  அழிந்து போயிருந்த முசலி…

Read More

இஸ்லாமிய உலகுக்கு தலைமை வகிப்பது யார் என்பதில் ISIS க்கும், ஈரானுக்கும் போட்டி – இஸ்ரேல்

ஐ.எஸ்.ஸூக்கு எதிரான போரில் ஈரானின் உதவியைப் பெறுவதற்காக, அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்துவது ஆபத்தானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெருசலேமில் திங்கள்கிழமை கூறுகையில், “”தங்கள் சுய நலனுக்காகத்தான் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஈரான் போரிடுகிறது. இஸ்லாமிய உலகுக்கு தலைமை வகிக்கப்போவது யார் என்பதில் ஐ.எஸ். அமைப்புக்கும், ஈரானுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது” என்றார்.

Read More

முஸ்லிம் இளைஞனின் நேர்மை…!

இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் லத்தீப் என்னும் மாணவன் ஐதராபாத் எஸ்.ஆர். நகரில் வசிக்கிறார். 21 09 2014 அன்று காலை அப்துல் லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் அரசு வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவர் எடுக்க நினைத்த பணம் ரூ. 200 தான். இதற்காக தனது ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் செலுத்திய பின்னர், தனது ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்தினார். அப்போது திடீரென அந்த ஏடிஎம் இயந்திர…

Read More

விமான சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் மரண தண்டனை

தாய்லாந்து நாட்டின் தற்காலிக பிரதமராக இருந்த யிங்லக் ஷினவாத்ராவின் குடும்ப அரசியலை எதிர்த்து, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 2008ல் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தால், அந்நாட்டின் இரு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன. கடந்த 2011ல் நடந்த தேர்தலில், யிங்லிக் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, எதிர்க்கட்சியினர் வழக்கு  தொடர்ந்தனர். இறுதியில், கடந்த மே மாதம், யிங்லக், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்கட்சியினருக்கும்…

Read More

ஈரான், அமெரிக்க நாடுகளிடையே பேச்சு

ஈரான் மற்றும் வல்லரசு நாடுகளுக்கிடையில் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமெரிக்க, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இப்பேச்சுவார்த்தையின்போது, ஐ.எஸ். வாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்தும் ஜான் கெர்ரியும், ஜாவத் ஜரீபும் விவதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

சிரியாவில் ISIS இலக்குகள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்

ஐ.எஸ்., வாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இது ஐ.எஸ். தடுப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read More

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கை வருகிறார்..!

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பினை ரஸ்ய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி புட்டின் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ரஸ்ய தலைவர் ஒருவர் இலங்கை;கு விஜயம் செய்ய உள்ளார். புட்டினின் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More