அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பலசேனவின் சோடிக்கப்பட்ட பொய்கள் ஒரு போதும் உண்மையாகாது
K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன.உலக சரித்திரத்தில் கால் நூற்றாண்டு அகதிவாழ்வு(அவலவாழ்வு)வாழ்ந்தோர் என்ற பெயர் இவர்களின் தலையில் எழுதப்படவுள்ளது.மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் வடபுலமண்ணில் முஸ்லிம்கள் மீளக்குடியேறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால் ஒரு 30 வீதமக்களே இதனைச்சரியாகப் பயன்படுத்தி மீளக்குடியேறியுள்ளனர்.ஏனைய மக்கள் சரியான முடிவுக்கு வரமுடியாமல் திண்டாடி வருகின்றனர்.அதற்கான காரணங்களாவன,,போதிய காணிகள் இன்மை,அழிக்கப்பட்ட வீடுகள் இன்னும் மீளக்கட்டிக்கொடுக்கப்படாமை.நட்டஈடுகள் வழங்கப்படாமை, பலவந்த வெளியேற்றத்தால் ஏற்பட்ட 23 வருட தமிழ் முஸ்லிம் உறவிடைவெளி தற்போது மெல்ல குறைவடைந்து…
