Headlines

அல்கொய்தா இந்தியாவுக்கு எதிரான மிரட்டல் அல்ல

அல்கொய்தா இயக்கம் இந்தியாவில் தனது கிளையை தொடங்குவதாக அறிவித்து இருப்பது பற்றி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கெய்ட்லின் கெய்டன் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், நிருபர்களிடம் கூறுகையில், இது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை- என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘அல்கொய்தாவின் இந்த புதிய அறிவிப்பை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. இது தொடர்பான தகவல்களை கவனித்து வருகிறோம். இது இயக்கங்களிடையேயான போட்டியாக கருதுகிறோம். மேலும் அமெரிக்கர்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் கருத…

Read More

தேசிய கீதம் தமிழ் மொழியில் படப்பட வேண்டும்- ரவூப் ஹக்கீம்

தேசிய கீதத்தைக் கூட நாங்கள் இன்னும் ஒரே மொழியில் படித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலைமை இருப்பது வருந்தத்தக்க விடயம், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என   நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாங்களாக இருக்கிற ஒரு மாகாண சபையில் கூட இரண்டு மொழிகளிலும் இசைப்பதற்கு நாங்கள் துணிய வேண்டும். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அது உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம். என்னைப் பொறுத்தமட்டில் நாங்கள் துணிகரமாக…

Read More

விசமானது உணவு; ஆபத்தான நிலையில் 60 பேர் வைத்தியசாலையில்

இலங்கை சுதந்திர வர்த்தக வலயங்களில் ஒன்றான கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, விஷமாகியதில் 60 பேர் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவே விஷமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

Read More

அல்-கொய்தாவின் மிரட்டல்- இலங்கை அரசு தீவிர கவனம்

இந்திய துணைக்கண்டத்திலும் அல்-கொய்தா அமைப்பின் பிரிவை அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அல்-கொய்தா, தீவுக்குள் நுழைவதை தடுப்பதற்கு விஸா கட்டுப்பாடுகள் மற்றும் விஸா மீளாய்வுகளை இலங்கை பரிசீலிக்க உள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல்-கொய்தா ஆதரவு, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., ஈராக்,சிரியா ஆகிய…

Read More

39ஆவது சட்டமா அதிபரின் 7ஆவது சிரார்த்த தினம்

நாட்டின் 39ஆவது சட்டமா அதிபராக பதவிவகித்த மறைந்த கே.சி.கமலசபேஷனின் 7ஆவது சிரார்த்த தினம், சட்டக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் சட்டமா அதிபர் பாலித்த பெர்னண்டோ பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக வருகைதந்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Read More

முதியோர் தினத்தில் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

முதியோர் தினத்தை முன்னிட்டு கைதடி முதியோர் இல்லத்தில்  கடந்த 60 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.எதிர்வரும் 1 ம் திகதி முதல் 7 ம் திகதி வரை முதியோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவர்கள் முதியோர் இல்லத்துக்கு இவர்கள் ஆற்றிய சேவைகள்  நினைவு கூரவுள்ளதாக இல்லத்தின் பணிப்பாளர்  கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

Read More

குற்றவாளியை தண்டிக்கும் அதிகாரம் மகிந்தவுக்கே – மெக்ஸ்வெல் பரணகம

இலங்கையில் இடம்பெற்ற  போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் சட்ட மா அதிபருக்குமே காணப்படுகின்றது என காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்ற செயல்கள் தொடர்பில் உயர் நீதிமன்ற நீதவான்கள் விசாரணை நடத்த உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடையாது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்…

Read More

புறக்கோட்டை தங்க ஆபரண கடைத்தொகுதி இன்று திறப்பு; அமைச்சர் பசில் பிரதம அதிதி

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி இன்று மாலை 4.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றவுள்ளனர். 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலம் முதல் சென். ஜோன்ஸ் மீன் சந்தையாகவும் 1983 ஆம் ஆண்டு முதல் மீன்…

Read More

மங்கள சமரவீரவுடன் லண்டனில் அரச உயர்மட்டம் பேச்சுவார்த்தை

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்றுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதித் தலைவர் வழங்கும் விடயத்தில் தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்த மங்கள சமரவீர தற்போது லண்டன் சென்றுள்ள நிலையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவும் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த…

Read More

முள்ளியவளை நாவற்காடு கிராமத்திற்கும் மின்சார வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் – அமைச்சர் ரிசாத்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட முள்ளியவளை நாவற்காடு கிராமத்திற்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சரிடம் குறித்த கிராம மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். புல வருடங்களாக தாம் இருளில் இருப்பதாகவும், இதுபற்றி பல அரசியல் பிரமுகர்களிடம் கூறியும் தமக்கு மின்சார…

Read More

அரசியல் நடவடிக்கைகளுக்காக எந்த அரச அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லைவட மாகாண முதலமைச்சருக்குஅமைச்சர் பதில்

வன்னி மாவட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக எந்தவொரு அரச அதிகாரியும் ஈடுபடுத்தப் படவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத் பதியுதீன், அவ்வாறான ஒரு கருத்தை எந்தவொரு அரச அதிகாரியும் கூறவும் மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்றது. வடமாகாண சபைத் தேர்தலின் போது அரசு வடக்கு ஆளுநர் உட்பட அரச அதிகாரிகளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் றிசாத்…

Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சாரக்கடன்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சார இணைப்புக்களை பெற்றுக்கொள்ளுவதற்கு கடனுதவித் திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.எரிசக்தி மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமூவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்று இடம்பெறுகிறது.மஹிந்த சிந்தனை தேசிய வேலை திட்டத்தின் கீழ் சகருக்கும் மின்சாரம் என்ற இலக்கை நடைமுறைபடுத்தும் நோக்கில் இந்த கடன் திட்டம் இன்று செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் ஒருவர் 40,000 ரூபாவை கடனாக பெற…

Read More