ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறை மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிட முடியாது: சட்டவல்லுநர்கள்
18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் நழுவிப்போய்விட்டதென சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் என்று சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா முதன் முறையாக வெளியிட்ட சட்ட ரீதியான தர்க்கம் சக்திமிக்கதெனவும் அதனை மீற முடியாதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியலமைப்பின் 32/2 ஷரத்தின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு நபரும் அதன் பின்னர் அந்தப் பதவிக்கு மக்களால் தெரிவு…
