Headlines

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இரண்டு தமிழ் மாணவர்கள் கடந்த 9 ஆம் திகதியன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் ரசிந்து ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கடந்த புதன்கிழமையன்று இரண்டு மாணவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தம்மை தாமே காயப்படுத்திக் கொண்டதாக கூறி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்தே ஏனைய இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இயல்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்த முயன்றனர் என்று குற்றச்சாட்டின் பேரிலேயே…

Read More

‘சுனாமி பேபி’ அபிலா’_க்கு நேற்று புலமைப்பரிசில் பரீட்சை: சித்தியடைவேனென நம்பிக்கையுடன் கூறுகிறார்

‘சுனாமி பேபி’ என்று பத்து வருடங்களுக்கு முன்னர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அபிலாஷ் மட்டக்களப்பு செட்டிப் பாளையத்தில் உள்ள பாட சாலையில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளான். கடந்த 2004 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப் பேரலையில் சிக்கி அபூர்வமான முறையில் உயிர்தப்பிய அபிலாஷ் அக்காலத்தில் உலகத்தையே தனது பக்கம் ஈர்த்தவர். அன்று கைக்குழந் தையாக இருந்த அபிலாஷ் தற்போது பத்து வயதுடைய சிறுவனாக நேற்று புலமைப்பரிசில் பரீட்சை எழுதினான்….

Read More

இலங்கையில் 10,400 போலி மருத்துவர்கள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போலி மருத்துவர்களை கண்டறியும் குழுவின் தலைவர் மருத்துவர் ஹரித அளுத்கே இது தொடர்பாக தெரிவிக்கையில், மருத்துவச் சபை, ஆயுர்வேத மருத்துவ கட்டளைச் சட்டம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யாத எவருக்கும் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. நாட்டில் சகல பிரதேசங்களிலும் தனியார் மருத்துவ சேவைகளில் ஈடுபடும் நபர்களில் 26.4 வீதமானவர்கள் போலி மருத்துவர்கள் எனவும் அளுத்கே குறிப்பிட்டுள்ளார். அதிகளவான போலி மருத்துவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே உள்ளனர்….

Read More

முஸ்லிம்கள் போட்டியிட முன்வராமையை மூடிமறைக்கவே போலிப்பிரச்சாரம் – அரசின் வங்குரோத்து நிலையை சாடுகிறார் ரிசாத்

எ.எச்.எம்.பூமுதீன் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுகின்து என்ற அரசாங்கத்தினதும் ஐ.தே.க வினதும் குற்றச்சாட்டு எந்தவித அடிப்படை ஆதாரமும் அற்றது என மிகக் காட்டமாக கருத்து வெளிப்படுத்தியுள்ள அ.இ.ம.கா. தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் , இது அவ்விரு கட்சிகளினதும் முஸ்லிம்கள் ஆதரவு இன்மை  தொடர்பிலான வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்ட போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊவாத் தேர்தலில் அரசின் சார்பாக போட்டியிட கெஞ்சிக் கூத்தாடியும் கூட ஒரு முஸ்லிமேனும் முன்;வராமையை மூடி…

Read More

உடலுறுப்புக்களை கடத்தும் மையங்களில் இலங்கை முக்கியமானது – NEWYORK TIMES

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலுறுப்புக்களை கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் உள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் ‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து உடலுறுப்புக்கள் கடத்துவது தொடர்பில் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னாள் காப்புறுதி உத்தியோகத்தரான அவிகாட் சாண்ட்லர் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. ஒபிரா டொறின் என்ற பெண்ணுக்கு சிறுநீரகங்களைப் பெற முயற்சித்த போது இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். சிறுநீரகங்களின் கடத்தலுக்காக இஸ்ரேலில் இருந்து 2 இலட்சம்…

Read More

இலங்கைக்கு விஜயம் செய்யும் மூன்று ஆசிய நாட்டுத் தலைவர்கள்!

இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். குறித்த தலைவர்கள் இலங்கைக்கு இந்த ஆண்டில் விஜயம் செய்வார்கள் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இந்த மூன்று தலைவர்களும் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளனர். ஜப்பானிய பிரதமர் ஜின்சோ அபே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ம் திகதி சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார். இந்திய பிரதமர்…

Read More

முஸ்லிம்களுக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சகரால் ஏற்பாடு செய்யப்பட்ட தெஹிவளை கூட்டம்!

2014 ஆகஸ்ட் 14 என்.கே. இலங்ககோன் அவர்கள் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையகம் கொழும்பு அன்பின் பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு 2014 ஆகஸ்ட் 04ஆம் திகதி கல்கிசை ஜயசிங்க மண்டபத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டம் 2014 ஆகஸ்ட் 04ஆம் திகதி சுமார் 150 பேர் தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் கூடியதாகவும் முஸ்லிம் பெண்களின் ஆடைகள், முஸ்லிம் சமய, கலாசார நடைமுறைகள் பள்ளிவாசல்கள் போன்ற முஸ்லிம்களுடன் மட்டுமே தொடர்பான விடயங்கள்…

Read More

இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள் இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர்!

-Kalaiyarasan காஸா போரின் எதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளில் இடதுசாரி யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளின் வெகுஜன ஊடகங்கள் உண்மைகளை மறைத்து, திரித்து கூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவும் தகவல்கள், ஒரு சமூக அசைவியக்கத்தை உண்டாக்கி உள்ளது. இஸ்ரேலுக்கு அடுத்ததாக யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவில், தலைமுறை இடைவெளி காரணமாக யூத குடும்பங்களுக்குள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும்…

Read More

மாயமான மலேசிய விமானத்தின் பயணிகளின் பணம் மாயம்!

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்- 370 என்ற விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு செல்லும் வழியில் மாயமானது. இந்த விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.விமானம் மாயமாகி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை இந்த விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும்…

Read More

நிலவில் நிழலாடியது மனிதன் அல்ல: நாசா விளக்கம்!

நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வெளியான காணொளிக்கு நாசா விளக்கமளித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலவின் ஒரு மனிதனின் உருவமும்இ அதன் நிழலும் நிலவின் தரைப்பரப்பில் தெளிவாக தெரிந்தது போலவும் வெளியான காணொளியை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். முதலில் இதை அமெரிக்க சர்வதேச விண்வெளி மையமான நாசா வெளியிட்டதாக கூறப்பட்டாலும்இ அதை நாசா உறுதிப்படுத்தவில்லை. தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள நாசா விஞ்ஞானிகள் கூறியதாவதுஇ இவ்வாறு நிலவில் தோன்றியது மண்…

Read More

ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் – அமைச்சர் ரிசாத் பதியுதீன்

கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எச்.ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார் மார்க்கப்பணியில் தன்னை அர்ப்பணித்து சிறந்த உலமாவாக இருந்ததுடன் முஸ்லிம் ஊர்களில் மத்ரசாக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்தார். பலகாலமாக அரசியலில் திகழ்ந்த இவர் கண்ணியமான அரசியலை முன்னெடுத்ததை  நாம் அறிவோம் தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகவும் பக்குவமானவராவும் நற்பண்புகளைக் கொண்டவராகவும் பல முன்மாதிரிகளைக் கொண்டவராகவும் திகழ்ந்தார்….

Read More

05ஆம் ஆண்டு புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் வாழ்த்து தெரிவிப்பு

-அமைச்சின் ஊடகப்பிரிவு– இன்று 05ஆம் ஆண்டு புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சையில் சித்திபெற்று பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும்; நற் பெயரை பெற்றுக்கொடுப்பதோடு எதிர்கால சமுகத்தை வழிநடத்துபவர்களாக மிளிர வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார். இப்பரீட்சையானது கல்வித்துறையில் ,ஒவ்வொரு மாணவர்களும் சந்திக்கவுள்ள  அனைத்து பரீட்சைகளுக்கும் முன் அனுபவமாகவுள்ளது. சிறுவயதில் இரவு பகலாக பரீட்சைக்கு தங்களை ஆயத்தம் செய்து ,பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் ,வெற்றி ,தோல்வி…

Read More