Headlines

அமெரிக்க விமானத் தாக்குதல் உதவியுடன் ISIS வசமிருந்த மோசுல் அணையைக் கைப்பற்றியது குர்டிஷ் படை

மோசுல் நகரில் ISIS போராளிகள் வசம் சிக்கியிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணையை (dam) அமெரிக்க விமானத் தாக்குதலின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்து இனப் படைகலான பெஷ்மெர்கா ஆகியவை கைப்பற்றியுள்ளன. குறித்த மோசுல் அணையை அமெரிக்கா உலகின் மிக ஆபத்தான் அணை என விவரித்துள்ளது. ISIS வசமுள்ள நகரங்களை மீட்பதில் சமீப காலமாக குர்து இனப் படைகள் அமெரிக்காவின் விமானத் தாக்குதல் உதவியுடன் கடுமையாகப் போராடி வருகின்றன. ISIS குர்து இனத் தலைநகரான மோசுலைக் கைப்பற்ற முன்னர்…

Read More

நேபாளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை வெள்ளம்:நூற்றுக் கணக்கானோர் பலி

நேபாள நாட்டில் இவ்வருடம் பருவ மழை கனமழையாகப் பெய்து வருவதால் அங்குள்ள மலைத் தொகுதிகளில் இருந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலங்கள் ஊடாக பாயும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது. இதனால் உத்தரப் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 60 பேர் இறந்துள்ளதாகவும் 4 இலட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் பணியில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் பயன்படுத்தப் பட்டுள்ளதுடன் உணவுப் பொட்டலங்களும் விநியோகிக்கப் பட்டன. நேபாளத்தில் பெய்து வரும் கனமழையில் ஏற்பட்ட…

Read More

ஈக்வடோர் தூதரகத்திலிருந்து வெளியேறவுள்ளேன் – விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்

விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்காவின் ரகசிய தகவல் தொடர்பாடல்களை அசாஞ் அம்பலப்படுத்தியிருந்தார்.  விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ் லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்திலிருந்து விரைவில் வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார். ஜூலியன் அசாஞ் வெளியேறுகின்ற போதும், அதற்கான காரணத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. அவர் இதய மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயினால் அவதிப்பட்டு வருவதாக அண்மைய நாட்களாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்தபடியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜூலியன் அசாஞ் லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தங்கியிருந்துவருகின்றார். தூதரகத்தை விட்டு வெளியில் வந்தால் கைதுசெய்யப்பட்டு சுவீடனிடம்…

Read More

இந்தியா – பாகிஸ்தான் பேச்சு ரத்து!

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வருகிற 25ம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது ரத்தாகியுள்ளது. காஷ்மீர்  தலைவர்களை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சந்தித்துப் பேச இருப்பதன் காரணமாக, இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தலையிட்டு வருவதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலருடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக…

Read More

வதந்திகள் மூலம் நாட்டில் வன்முறைகளைத் தூண்ட முயற்சி: ஹெல உறுமய குற்றச்சாட்டு

மக்கள் வதந்திகளை நம்பக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சில முஸ்லிம் தலைவர்கள் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவதாகவும் சொத்துக்கள் அழிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தினர். இது தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியிருந்தனர். சமூக அந்தஸ்த்தைப் பயன்படுத்தி இவ்வாறு ஊடகங்களில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்போருக்கு எதிராக…

Read More

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளின்போது இந்தியா தூய்மையானதாக இருக்கவேண்டும் – மோடி!

மகாத்மா காந்திஜியின் 150 வது பிறந்த நாளுக்குள் தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நரேந்திர மோடி, தமது சுதந்திர தின உரையில் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இது காந்தியின் கனவு என்றும் கூறியுள்ளார். காந்திஜியின் 150 வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும்போது இந்தியா தூய்மையானதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சில விஷயங்களை வலியுறுத்தி…

Read More

கூகுள் நிறுவன நெட்வொர்க் கேபிள்களை கடித்த சுறாக்கள்

கடலுக்கடியில் கூகுள் நிறுவன நெட்வொர்க் கேபிள்களை சுறாக்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் தனது நெட்வொர்க் பயன்பாட்டிற்காக கண்ணாடி இழை கேபிள்களை பசிபிக் கடலுக்கு அடியில் பதித்து உள்ளது. இந்த கண்ணாடி இழைகள் சூப்பர் கார்டு மெட்டிரியல் மற்றும், புல்லட் புரூப், போன்றவைகளல் உருவாகப்பட்ட பொருட்களால் மிகுந்த பாதுகாப்பாக மூடபட்டு இருக்கும். அப்படி இருந்தும் இந்த கண்ணாடி இழை கேபிள்களை சுறாக்கள் கடித்து சேதபடுத்தி உள்ளது. கடலுக்கு அடியில் பொருத்தபட்டு உள்ள கேபிள் இழைகளில் இருந்து சுறாக்களுக்கு…

Read More

இந்திய மீனவர்களின் படகுகளை ஒருபோதும் கையளிக்கமாட்டோம் – அமைச்சர் ராஜித

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை அவர்களிடம் மீண்டும் கையளிக்கப் போவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 94 பேர் இந்திய சுதந்திரதினத்தையயாட்டி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய விடுதலைசெய்யப்பட்டனர். எனினும், அவர்களிடமிருந்தும் முன்னர் கைதாகி விடுதலைசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள 69 படகுகளைத்…

Read More

ஐ.தே.கவின் பிரதித் தலைவராக நியமனம் பெறுகிறார் சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு அவர் பிரதித் தலைவராக நியமிக்கப்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையாக பிரதித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய சந்தர்ப்பமாக அமையும். அடுத்த செயற்குழுக் கூட்டத் தின்போது கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சஜீத்தின் இந்த நியமனத்துக்கு மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்கா, விஜயதாஸ ராஜபக்­ ஆகியோர் கடும்…

Read More

2004 சுனாமியை விட இலங்கைக்கு வருட இறுதியில் பாரிய பேரழிவு – உலக வளிமண்டலவியல் திணைக்களம்

2004 இல் ஏற்பட்ட சுனாமியை விடவும் பாரிய இயற்கைப் பேரழிவு ஒன்று இந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெறக்கூடிய சாத்தியம் உள்ளதாக உலக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எல்னிலா என்ற கடுமையான புயற்காற்றின் சீற்றம் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை பாதிக்கும் எனத்  தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆசியக் கண்டத்தில் இருக்கும் இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வெப்ப நிலை உயர்ந்து பாரியளவில் வறட்சி ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

18 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் கடத்தப்பட்ட வாகனம் ஏறாவூர் பொலிஸாரால் நேற்று மீட்பு!

18 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்ட ஹையேஸ் வேன் கொழும்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சமயம் ஏறாவூர் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்பி. பிறேமதிலக்க தெரிவித்தார். கம்பஹா – வெலிவேரியாப் பகுதியில் பாதையோரத்தில் வாகன விற்பனைச் சந்தையில் விற்பனைக்கிடப்பட்டிருந்த சமயம் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்தை விற்பனைக்கு வைத்திருந்த பீற்றர் பெரேரா, மற்றும் வாகனப் பதிவுப் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்திருந்த மெதகெதர…

Read More

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 26 ஆம் திகதி ஆரம்பம்!

நாடு முழுவதிலும் நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிளியு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் பரீட்சை நடவடிக்கையின் போது எந்தவித மோசடிகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நாடளாவிய ரீதியாக 2 ஆயிரத்து 870 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற பரீட்சையில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 585 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்…

Read More