தம்புள்ளைப் பள்ளிவிவகாரம் ஜனாதிபதி பணிப்பில் நிலைமை சுமுகம்
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை உட்பட முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாத் பதியுதீன் வியாழனன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துரையாடியதனையடுத்து தம்புள்ளை பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி முயற்சிகள் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாராந்த அமைச்சரவைக் கூட்டம் வியாழனன்று நடைபெற்ற பின் அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார். தம்புள்ளையில் கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதிக்கு அமைச்சர்…
