முஸ்லீம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை இனவாதம் பேசி தடுக்காதீர்!
யுத்தத்தினால் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது, இனவாதத்தை தூண்டவேண்டாம் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தினவீரக்கோன் தெரிவித்துள்ளார். இன்று(26) மண்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் குணரத்தினவீரக்கோன், மன்னார் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மண்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடினார். இதன்போது, அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹனைஸ் பாருக் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரிய ஆகியோறும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு…
