ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்!
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் தான் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். 20 ஆயிரம் வீடுகள் 78 பள்ளிவாசல்கள் மற்றும் 60 பாடசாலைகள் அழிக்கப்பட்டன. ஆனால் இன்று சஜித் பிரேமதாச முஸ்லிம்கள் வில்பத்து காட்டில் குடியேற்றப்படுவதாக விமர்சித்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீளக்குடியேற்றி அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஜனாதிபதி வழங்குவார் என்ற திடமான நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்….
