Headlines

முஸ்லிம் அமைச்­சர்­க­ளுடன் ஜனா­தி­பதி மஹிந்த சந்­திப்பு

அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமை ச்­சர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இவ்­வாரம் நடை­பெ­று­மென அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். இன்று (19) திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின்போது இச் சந்­திப்­புக்­கான திகதி தீர்­மா­னிக்­கப்­ப­டு­மென்றும் அவர் தெரி­வித்தார். இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான பொது­பல சேனாவின் போக்கு உட்­பட முஸ்லிம் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து இச்­சந்­திப்பின் போது பேசப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (எஸ்.கே)

Read More

பிரிந்திருக்கும் முஸ்லிம் தலைவர்களை மு.கா ஒன்றிணைக்க வேண்டும்

பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கௌரவிப்பு வைபவத்தின் போது உரையாற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அமீர் அலி பிரிந்து போயிருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஓரணியில் சேர்க்க வேண்டிய பொறுப்பு…

Read More

மாவனல்லையில் முஸ்லீம் கடைகளின் தீவைப்பு – விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி ரிசாத் வேண்டுகோள்!

மாவனல்லை சந்தியில் அமைந்துள்ள முஸ்லீம் கடையொன்று தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மாவனல்ல பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தினை நேரடியாக சென்று பார்வையிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஸ்தல விசாரணைகளினை மேற்கொண்டு வரும் பொலிஸாரிமே இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மாவனல்ல குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் சூத்திரதாரிகளினை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது…

Read More

மாவனல்லையில் முஸ்லிம் வியாபாரியின் வர்த்தக நிலையம் தீக்கிரையானது தொடர்பில் முறையான விசாரனை வேண்டும்

அளுத்கம வர்த்தக நிலைய தீவைப்பு சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மாவனல்லையில் முஸ்லிம் வர்தகரொருவருக்கு சொந்தமான மற்றுமொரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது .பல சேனாக்களின் வருகைக்கு பின்னர்தான் இந்த சம்பவங்கள் இடம்பெறுகிறது என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  நேற்று 18 அதிகாலை மாவனலை நகரில் தீக்கிரையாகியுள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தொடர்பில் வினவியபோதே மேற்படி தெரிவித்தார் .  மேலும் அவர் தெரிவித்த தகவலில் , மதவாதிகளின்…

Read More