முள்ளியாவலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் கணகரத்தினம் என்பவர்கள் காடழிப்பு செய்கின்றார்கள் என்பதில் உண்மையில்லை- ஹூனைஸ் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காடுகளை அமைச்சர் றிசாத் அழிப்பதாகவும்,அதற்கு துனையாக கணகரத்தினம் இருப்பதாக அதிரடி இணையத்தில் வெளியான செய்தி தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,புதுக்குடியிறுப்பு அபிவிருத்தி குழுவின் தலைவருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் விளக்கமொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு முதல் புத்தளம் உள்ளிட்ட பல பாகங்களிலும் அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.அதே போல் தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர்.அதன் பிற்பாடு இற்றைக்கு 3 வருடங்களுக்கு…
