Headlines

உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு

உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் தெரிவு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு.

Read More

வடமாகாண சபையின் எதிர்கட்சி பிரதம கொறடாவாக றிப்கான் பதியுதீன் நியமனம்

வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதம கொறடா ஆகியோர்களின் பெயர்களை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. நடை பெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் எதிர்கட்சியாக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காணப்படுவதால் எதிர்கட்சி தலைமைப் பதவி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனுக்கும்,எதிர்கட்சியின் பிரதம கொறடா பதவியினை ஜக்கிய முன்னணியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரை் றிப்கான் பதியுதீனுக்கும் வழங்குவதற்கான முடிவு…

Read More

முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள்- அமைச்சர் றிசாட் பதியுதீன்

(சர்ஜூன் ஜமால்தீன்)  வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சுயவிசாரனை செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக வாழ கைத்தொழில் மற்றும் வனிக துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார். மேலும் தனது வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டாவது.  முஸ்லிம்கள்  அல்லாஹ்வின் வேதத்தை கடைப்பிடித்து அவன் தடுத்தவற்றிலிருந்து விலகி சுவர்க்கத்திற்காக தயார் படுத்த வேண்டியுள்ளது. அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு…

Read More

சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர்.- அமைச்சர் றிசாட் பதியுதீன்

(சர்ஜூன் ஜமால்தீன்)  சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்;துகின்றனர். தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், அம்மக்களின் வறுமையைப் பற்றி சிந்திக்காமல் என்னை இனவாதியாக காட்டுவதன் மூலம் இம்மக்களிடத்தில் தாங்கள் தான் தமிழ் மக்களின் நலன்களில் கருசனை கொள்பவர்கள் என்ற மாயயைக் காட்டுகின்றனர் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படாமைக்கு அராசாங்கத்தில் ஒட்டியிருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீனே காரணம் என்ற பாராளுமன்ற உறுப்பினர்  அரயேந்திரனின் கூற்று தொடர்பாக…

Read More

மன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணம் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார்

(பெர்னாண்டோ ஜோசப்) மன்னார் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பயிலுணர்களாக கடமையாற்றிவந்த சுமார் 215 பேருக்கு குறித்த நியமணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாயம், நீர்ப்பாசணம், காணி உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட அமைச்சின் கீழ் இந்நியமணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலமை…

Read More

ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி – அமைச்சர் றிசாட் பதியுதீன்

(ஊடகப் பிரிவு) ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதும் முக்கியத்துவமானதுமான ஹஜ் கடமையினை நினைவு கூறும் வகையில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் தினத்தில், எமது வாழ்வில் விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு என்பவைகள் ஏற்பட வாழ்த்துரைப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமாகிய அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலக முஸ்லிம்கள் இன்றைய தினம் நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து அதன் மூலம் கற்றுக்…

Read More

பழைய ஈழத்தில் புதிய அகதிகள்

(சர்ஜூன் ஜமால்தீன்) வட மாகாண சபைத் தேர்தலில் வட முஸ்லிம்கள் தொடர்பான ஒரு கருத்து நோக்கு வடக்கிற்கான மாகாண சபைத் தேர்தலை பல சர்வதேச உறுப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துகின்றன. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் வெற்றிவோம் என்ற நம்பிக்கையிலும் வேறுபட்ட பிராந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புத் தான் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்து நிலையில் அரசாங்கமும் உள்ளது. இத்தேர்தலில் அரசாங்கமும் அதனை பிரதிநித்துவம் செய்யும்…

Read More

கிளிநொச்சி வரைக்குமான புதிய புகையிரத சேவை ஆரம்பம்

(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) வடக்கில் 23 வருடங்களின் பின்னர் மீண்டும்கிளிநொச்சிக்கான  புகையிரத சேவை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்ககப்பட்டது.இன்று காலை மாங்குளத்திலிருந்து வைபவ ரீதியாக புகையிரதம் பயணிக்கும் நிகழவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாங்குளத்திலிருந்து -கிளிநொச்சிக்கான  முதலாவது பதிவினை பதிவேட்டில் பொறித்தார்.  

Read More

எம்மை வீழ்த்தும் பணியில் சக்திகள் கூட்டு சேர்வு

  இந்த ஜனாதிபதியினையும்,எங்களையும் வீழ்த்த துடிக்கும் நபர்களிடமும்,கட்சிகளிடமும் கேட்கின்றோம்,துன்பத்தால்,அழிவால்,கஷ்டத்தால்,பாதிப்பால் அனைத்தையும் இழந்து தவிக்கும் இம்மக்களை காப்பதற்கு என்ன திட்டம் இருக்கின்றது என தெரிவிக்க முடியுமா கேள்விழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்மற்றும் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அப்பாவி மக்கள் மத்தியில் சென்று இனவாதம்,மதவாதம் பேசி அவர்களை மீண்டுமொரு போருக்கு அழைப்புவிடுத்து அவர்களது வாழ்க்கையினை இல்லாமல் ஆக்கும் அநியாயத்தை எமது மண்ணில் செய்யாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…

Read More

இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் உள்ளதா? கோட்டா தனது கருத்தை தெளிவுபடுத்த வேண்டும்!

(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்)  பாது­காப்புச் செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ முஸ்லிம் பயங்­க­ர­வாதம் தொடர்பில் வெளியிட்ட கருத்­தினை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கண்­டித்­துள்­ளார். இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வ­து; சமூகங்களுக்கு மத்தியில் இவ்வாறு புனையப்பட்ட கருத்துக்கள் பரப்படுவதால், அரசாங்கத்துக்கே சர்வதேசத்தில் களங்கம் ஏற்படுகிற­து. இலங்கையின் சுதந்திரத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். ஏனைய மதங்களுடன் பிரச்சினைகள் ஏற்படுவதையும் தடுத்துள்ளனர் . தனிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை….

Read More

வடமுஸ்லிம்கள் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ வேண்டும் – றிசாத் பதியுதீன்

(சர்ஜூன் ஜமால்தீன்) வடக்கு முஸ்லிம்கள் உதைபடும் கால்பந்து போல் எல்லாத் திசைகளிலும் நசுக்கப்படுகிறார்கள்.இலக்குகளை நோக்கி நகர முடியாதவாறு அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் எதிரிகளால் நகர்த்தப்படுகின்றன. இவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து வடமுஸ்லிம்கள் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ வேண்டும் என அமைச்சர் றிஷhட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கொய்யாவாடியில் நேற்று2013-08-30 நல்லிரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்; உரையாற்றுகையில் அல்லாஹ்வின் உதவியால் வடக்கு முஸ்லிம்களின் நிலைமை இப்போதுதான் மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இம்மக்கள் 20வருடங்களாக…

Read More

இளைஞர்களின் சக்திக்கு பின்னால் தான் எதுவும்-வேட்பாளர் றிப்கான் பதியுதீன்

  மன்னார் மாவட்டத்தில் இளைஞர்களைின் திறமைகளை இன்ம் கண்டு அவற்றை தேசிய மட்ட நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்களை தாம் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக வடமாகாண சபைக்கு மன்னார் மாவட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் உப்புக்குளம் ஜக்கிய மக்கள் சதந்திர முன்னணி அலுவலகத்தில் சற்று முன்னர் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் வேட்பாளர் றிப்கான் பதியுதீன் பேசுகையில் – இளைஞர்களின்…

Read More