வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் அவர்கள் ஆற்றிய உரையின் முழு வடிவம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, கெளரவ உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவா்களால் பிரேரிக்கப்பட்ட, சிறுபான்மை இனத்துக்கு மறுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான இந்த ஒத்திவைப்புப் பிரேரணையில், சிறுபான்மையிலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் பேசுவதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன். கடந்த காலத்தில் ஒரு வரலாறு இருந்தது. சிறுபான்மை இனத்துக்கு ஒரு பாதிப்பு என்றால்,அல்லது ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும்பொழுது அடுத்த சிறுபான்மை இனம் அதற்காகக் குரல் கொடுக்கும். அதாவது, முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டபொழுது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்காகக்…
