Headlines

யால தேசிய பூங்காவால் 6000 இலட்சங்கள் வருமானம்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை ருஹுனு யால தேசிய பூங்காவின் வருமானம் மாத்திரம் 6000 இலட்சங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் சுமார் 5 இலட்சத்திற்கு அதிகமான உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால பூங்காவை பார்வையிட வருவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தின் ஒரு நாளில் மாத்திரம் இதன் வருமானம் 45 இலட்சமாக காணப்பட்டதாகவும்,ஏனைய நாட்கள் வழமைப் போலவே 25 இலட்ச வருமானங்களை பெற்றதாகவும் அவர் மேலும்…

Read More

யால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி மூடப்படுகிறது!

யால தேசிய விலங்குகள் சரணாலயத்தின் ஒரு பகுதி நாளை (1) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் உள்ளக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு, விலங்குகள் வேறு பிரதேசங்களுக்குச் செல்வதை தடுப்பதற்காக மின்வேலிகளும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

தற்காலிகமாக மூடப்படும் யால வனவிலங்குகள் சரணாலயம்!

யால தேசிய வனவிலங்குகள் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை இது மூடப்படுவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விலங்குகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விலங்குகளின் இயற்கை நடத்தைகள் குறுக்கீடு இல்லாமல் இடம்பெறுவதற்கும் யால வனவிலங்குள் சரணாலம் மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஒவ்வொரு வருடமும் குறித்த காலப்பகுதியில், யால சரணாலயத்தை தற்காலிகமாக…

Read More