Headlines

ஷசி வீரவன்ச மீது வழக்கு தாக்கல்

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச மீது இன்று(30) வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு போலி தகவல் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து முறைசாரா வழியில் வெளிநாட்டு கடவுசீட்டினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டமா அதிபரின் ஆசோனைக்கமைய குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் ஷசி வீரவன்சவுக்கு எதிரான முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான்…

Read More

சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு கடந்த முதலாம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விமல் ஆஜர்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் அவர் வீடமைப்பு, பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தினுடைய வாகனங்கைள முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக வாக்கு மூலம் அளிக்கவே முன்னிலையாகியுள்ளார். எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதியும் விமல் வீரவன்ச அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை…

Read More

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச  நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு இன்று (01) அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More