Headlines

தாஜுடீனின் கொலை : சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பொலிஸ் அதிகாரிகள் இருவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த கொலை தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான்…

Read More

மதத் தலைவர்களை இழிவுபடுத்தாமல் இருக்க புதிய சட்டம்?

மதத் தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்த இடமளிக்காத வகையிலான புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பிலான உத்தேச சட்ட வரைவு பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று (5) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றின் விசேட வரப்பிராதங்களை பயன்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு மதத் தலைவர்களையும் இழிவுபடுத்த அவமரியாதை செய்ய இடமளிக்கக் கூடாது என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றில்…

Read More

மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது!- நீதி அமைச்சர்

wrவின் கோரிக்கைக்கு அமைய மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது யார் யாராவது தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவே நாட்டின் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட முடியாது. சட்டங்களை இயற்றும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்படுகின்றது. மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றின் கருத்தை கோரியிருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டிருந்தது. எனினும், மரண தண்டனை குறித்து இந்த விவாதங்களின் போது தீர்மானம்…

Read More

சட்டக்கல்லூரி பரீட்சை: மும்மொழியிலும் வினாத்தாள்கள்!

சட்டக்கல்லூரி மாணவர்களின் பரீட்சைக்காக வழங்கப்படும் பரீட்சை வினாத்தாள் அரச மொழி கொள்கைக்கமைய மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அந்த கொள்கை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இது தொடர்பில் அமைச்சு கிடைத்த முதல் வாரத்திலேயே நான் நடவடிக்கை எடுத்தேன்….

Read More