நாடெங்கிலும் உள்ள வக்பு சொத்துக்கள் மீட்கப்படும் – சட்டத்தரணி யாஸீன்
– ஏ.ஆர்.ஏ.பரீல் – நாடெங்கும் முறையற்ற விதத்தில் வக்பு சட்டத்துக்கு முரணாக பயன்படுத்தப்படும் வக்பு சொத்துக்களை மீட்டெடுத்து சமூகத்தின் நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாஸீன் தெரிவித்தார். முறையற்ற விதத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள் பயன்படுத்தும் வக்பு சொத்துகள் தொடர்பில் வினவியபோதே வக்பு சபையின் தலைவர் யாஸீன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,வக்பு சொத்துக்கள் பெறுமதிமிக்கவை. அவை அல்லாஹ்வின் சொத்துக்களாகும். வக்பு சட்டத்தின் கீழ் சொத்துக்களைக் கண்காணிக்கும்…
