Headlines

மீண்டும் மாணவர்களுக்கு சீருடைகள்.!

கஷ்ட, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தூர கிராம பாடசாலைகளின் மாணவர்களுக்கு இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட விசேட சுற்று நிருபத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் நலன்கருதியும், தரமான சீருடைகளை வழங்கும் நோக்குடனும் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 4,471 பாடசாலைகளுக்கு குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட சீருடைகளில் தரமற்ற புடவைகளுக்கு பதிலாக மாற்றீட்டு…

Read More

பொலிஸ் சீருடையைப் பயன்படுத்த அனுமதி பெறவேண்டும்

திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் விளம்பர ஒளிப்பதிவுகளின் போது பொலிஸ் சீருடை பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கான அனுமதியை பொலிஸ் திணைக்களத்திடம் கோர வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். பொலிஸாரின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பரமொன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால் இனிவரும் காலங்களில்…

Read More

நாளை முதல் ­வவுச்­சர்கள் வழங்கப்படும்

தேசிய அர­சாங்­கத்­தின்­ சீ­ருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை முதல் ­நா­ட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளிலும் வி­நி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா கல்வி அமைச்­சர்­ அ­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரிவித்தார். கல்வி அமைச்­சி­னால் ­வெளியி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்கை ஒன்­றி­லேயே கல்வி அமைச்­சர்­ மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார். அவ்­வ­றிக்­கை­யில் ­மே­லும் ­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, தேசிய அர­சாங்­கத்­தி­னால்­ அ­றி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நாட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அர­சாங்­கப் ­பா­ட­சா­லை­க­ளில் ­கல்வி பயிலும் அனைத்து மாண­வர்­க­ளுக்கு சீருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை…

Read More

சீருடைகளுக்கான வவுச்சர்கள் டிசம்பர் முதலாம் திகதி

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Read More

இலவசச் சீருடைத் திட்டத்தில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்குப் பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம். பந்துசேன தெரிவித்தார். எனினும் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான மேலதிக செயற்பாடுகள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனூடாக…

Read More