Headlines

ஒல்கொட் மாவத்தையில் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டை, ஒல்கொட் மாவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Read More

முச்சக்கரவண்டி சாரதி, அனுமதிப்பத்திர வயதெல்லை 23..?

முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான வயதெல்லையை 23ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்புத் தொடர்பிலான அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, அகில இலங்கை முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் டீ.ஆர்.ஆர்.பள்ளி இதனை முன்வைத்தார். இவ்விடயம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கென ஒரு குழுவினை நியமிக்குமாறு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

Read More

 நூதனசாலைக்கு முன்பாக மரமுறிந்து விழுந்தது

கொழும்பு, நூதனசாலைக்கு முன்பாக பாரிய மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் அப்பகுதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக கொழும்பு நகரின் வீதிகள் சிலவற்றை மூடுவதற்கு நேரிடுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும் சில வீதிகள் ஊடான வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கும் நேரிடும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மாளிகாவத்தை பிரதேசத்தில், பிரதீபா மாவத்தை, ஜும்ஆ மஸ்ஜித் சந்தியிலிருந்து சங்கராஜ சுற்றுவட்டம் வரையான வீதிகள் மூடப்படவுள்ளன. பிற்பகல் ஒரு மணிமுதல்…

Read More

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு.!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கெண்டைனர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒரு வழி பாதையில் இடம்பெறுவதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். தலவாகலையிலிருந்து கொழும்பிற்கு 12 டொன் நிறையுடைய  தேயிலை தூல் ஏற்றி சென்ற லொறியே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கினிகத்தேன 20 மைல் பகுதியில்  விபத்துக்குளாகியுள்ளது. லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரினால் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதிலும் வாகன போக்குவரத்துக்கு தடையேட்பட்டு ஒரு வழி பாதையில் வாகனங்கள் பயணிப்பதாகவும் விபத்து தொடர்பில் விசாரணை…

Read More

தொடரும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – கொடகம வெளியேரும் வழியிற்கு அருகில் கொழும்பில் இருந்து மாத்தறை வழியாக கதிர்காமம் செல்லும் வாகனங்களால் ஏற்பட்டிருந்த வாகன நெரிசல் தொடர்ந்து இதுவரையும் காணப்படுகின்றது. மேலும் , தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தேவையான அனுமதி பத்திரங்களையும் , கட்டணத்தையும் தயார் நிலையில் கொண்டு வருமாறு அதிகாரிகள் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read More

நுவரெலியாவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

வசந்த காலத்தையொட்டி நுவரெலியா நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, விசேட போக்குவரத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுவரொட்டியில், அவசர நேரங்களில் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியையும், பொலிஸாரையும் 052-2222226, 052-2222223, 052-2222444, 052-2222225, 072-6534317 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வசந்தகால நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இந்த விசேட பாதுகாப்பு…

Read More

தொடர்ச்சியாக எட்டு வாகனங்களை முட்டித்தள்ளிய பஸ்!

அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லொறிகள், கார், முச்சக்கர வண்டி மற்றும் வேன் போன்ற வாகனங்களுடன் தொடர்ச்சியாக மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

பாரவூர்தி இறுகியதில் கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

பேலியகொட  கலு பாலத்தின் அருகில் பாரவூர்தியொன்று இறுகியமையினால் அப்பகுதி வழியேயான போக்குவரத்து பெரும் பாதிப்பபுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள்தெரிவித்தார். மேலும், குறித்த பாரவூர்தி விபத்து காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்காரணமாக ரயில சேவைகளும் தாமதமடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன் சாரதிகளும் தங்களது வாகனங்களை சீராக ஓரங்கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனடிப்படையில், அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் லொறியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Read More

ஆட்டோ சாரதிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

முச்சக்கரவண்டிகளுக்கு பாதுகாப்பு ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்தல், தலைக்கவசங்களுக்​கென புதிய தரம் அறிமுகப்படுத்தல் உட்பட வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் புதிய பரிந்துரைகள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால், போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துக்களுக்கமைய வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பின்பற்றப்படும் 50 கிலோ மீட்டர் வேக…

Read More

விதி­களை மீறும் சார­தி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை

கல்­முனைப் பிர­தே­சத்தில் மஞ்சள் கட­வை­களில் வாக­னங்­களை நிறுத்தி பய­ணி­க­ளுக்கு வழி­வி­டாது செல்லும் சார­திகள் தொடர்பில் போக்­கு­வ­ரத்து பொலிஸார் கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பொது­மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர். கல்­முனை மாந­கர சபைக்­குட்­பட்ட கல்­முனை, கல்­மு­னைக்­குடி, சாய்ந்­த­ம­ருது, பாண்­டி­ருப்பு, மரு­த­முனை, பெரிய நீலா­வணை ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள பிர­தான வீதி­களில் பாத­சாரிக் கட­வைகள் ஊடாக பய­ணிகள் கடக்க முற்­ப­டும்­போது வாகனச் சார­திகள் வேகத்தை குறைத்து வாக­னங்­களை நிறுத்தி வழி­வி­டாது செல்­கின்­றனர். இதனால் மஞ்சள் கட­வை­களில் பாதையைக் கடக்க…

Read More

இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காலி வீதியில், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான பகுதி மற்றும் சைத்திய வீதியிலும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் காலி முகத்திடல் சுற்றுவட்டம்…

Read More