Headlines

யுத்த வெற்றி விழா இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது!

யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம்…

Read More

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம்

பத்து அர­சியல் கட்­சிகள் மற்றும் அமைப்­புக்கள் ஒன்றி­ணைந்து ஜன­நா­யக தமிழ்த் தேசிய முன்­னணி என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன. தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வென்றெ­டுக்க இந்த அமைப்­பினை உரு­வாக்­கி­யுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­தனர். இதில் ஆனந்தசங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலை கூட்­டணி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈ.பி.டி.பி., பிர­பா­ க­ணே­சனை ஸ்தாபகத் தலை­வ­ரா­கவும் ந.கும­ர­கு­ரு­ப­ரனை தலை­வ­ரா­கவும் கொண்ட ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், ப.உத­ய­ரா­சாவை தலை­வ­ராகக் கொண்ட சிறி­ரெலோ, இரா.பிர­பா­க­ரனை தலை­மை­யாகக் கொண்ட ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி, ஈழ…

Read More

முஸ்லிம்கள் அமைதியற்று இருக்க முடியாது: இரா.சம்பந்தன்

– என்.எம்.அப்துல்லாஹ் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் 1-5-2016 அன்று யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் பெருந்திரளான மக்கள், கட்சிப்பிரமுகர்கள் மத்தியில் இடம்பெற்றது. அதன்போது சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித்தலைவருமாகிய இரா சம்பந்தன் அவர்கள் “எமது பிராந்தியத்தில் முஸ்லிம்கள் அமைதியற்று இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார், நாம் ஒரு நீண்ட அமைதியற்ற காலத்தை கடந்துவந்திருக்கின்றோம், இவ்வாறான சூழ்நிலை மீண்டுமொருதடவை எமக்குத் தேவையற்றது, நாம் எமது பிராந்தியத்தில் அமைதியாக…

Read More

ரணில் – சம்பந்தன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் இன்று (27) புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, கிளிநொச்சியில் மக்கள் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில், பிரதமரிடம் அவர் முறையிட்டுள்ளார்.

Read More

சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கவில்லை

எதிர்க்­ கட்சித் தலைவர் ஆர்.சம்­பந்தன் கடந்த ஏப்ரல் மாதம் கிளி­நொச்சி மாவட்­டத்தில் உள்ள இரா­ணுவ முகா­மொன்­றுக்கு அத்­து­மீறி செல்ல முற்­பட்­ட­தாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை தமக்கு எவ்வித முறைப்பாடுகளும்  கிடைக்கவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

Read More

நாட்டை பிளவுபடுத்த முடியாது – JVP

வடக்கு கிழக்கு இணைந்த தனி பிராந்தியம் அமைப்பதோ அல்லது சமஷ்டி என்ற கோட்பாடோ ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. சமஷ்டி முறையின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்பட முடியாது. மாறாக நாட்டில் பிரிவினைவாதமும் இனவாதமும் மட்டுமே உருவாகும். ஆகவே சமஷ்டி மூலம் நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. வடமாகாண சபையின் செயற்பாடுகளையும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கருத்துகளையும் நாம் கடுமையாக கண்டிக்கின்றோம் எனவும் ஜே.வி.பி குறிப்பிட்டது. மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று (24)…

Read More

சுதந்திரதின நிகழ்வில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்கிறது

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை (4) காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார்களென கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

சிங்களவர்களிடமே மத்திய அரசின் பலம்: வாசு

இலங்கையில் “மத்திய அரசின்” பலம் சிங்களவர்களான பெரும்பான்மை இனத்திடம் உள்ளது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை நிராகரிக்க முடியாது என  மஹிந்த அணி ஆதரவு எம்.பி.யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.  ஒற்றையாட்சிக்குள் நாடு பிளவுபடும் என்ற கூட்டமைப்பின் “வாதத்தை” ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Read More

முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படாவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவேன்

வடக்கில் அடுத்த இரு வருடங்களுக்குள் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசுக்கு எதிராகப் போராடுவேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் சூளுரைத்துள்ளார். நாடாளுமன்றத்தில்  சனிக்கிழமை (5) இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறுகையில், எனக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம் எனவும், வன்னி அபிவிருத்தியில் என்னை இணைக்க வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக்…

Read More

சவூதியில் இலங்கை பெண்ணுக்கு இன்று மரண தண்டனை – சுமந்திரன் எம்.பி.

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில் 50பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள போதும் இலங்கைப் பெண்ணின் பெயர் அதில் இருக்கவில்லை என்று நேற்று வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் துறை…

Read More

சிங்களவர்களை அரவாணிகளாக்காதீர்: கெஹெலிய

மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு அரச அங்கீகாரத்தை வழங்கி சிங்களவர்களை”அரவாணிகளாக்கி” விடாதீர்கள். சிங்களக் கொடி கம்பீரமாக பறந்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என சபையில் கோரிக்கைவிடுத்த கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி.,காஷ்மீரில, இங்கிலாந்தில், பாகிஸ்தானில், ஜேர்மன், கனடாவில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றதா என்ற கேள்வியையும் முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. கெஹலிய ரம்புக்வெல்ல…

Read More

நான் இஸ்லாமியன் என்ற போதும், எனது பணி சகல சமூகத்திற்குமுரியது – அமைச்சர் றிஷாத்

– அபூ அஸ்ஜத் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More