Headlines

ஹெந்தவிதாரண, ரணவீரவின் நடவடிக்கைகளில் சந்தேகம்

முன்னாள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் தற்போதைய அம்பாறை சிரேஷ்ட பொலிஸ்அ த்தியட்சகருமான டி.ஆர்.எல்.ரணவீர, முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோர் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலையை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் முன்னெடுத்த சில நடவடிக்கைகள் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே…

Read More

வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த: அனுரவை சந்தித்தார்

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன். கொஸ்கம சாலாவ…

Read More

தாஜூடின் கொலை: விசாரணை கோவையை மூடுமாறு அனுர சேனாநாயக்க உத்தரவிட்டார்

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணை கோவையை மூடுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என ஓய்வு பெற்ற துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கமராலலாகே தர்மவர்தன விசாரணைகளின்போது கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். நீதவான் மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளனர். தாஜூடின் கொலை குறித்து நேற்று (26) நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி…

Read More

அனுர சேனாநாயக்கவிற்கு சிகிச்சை அவசியமில்லை!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை என சிறைச்சாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான அனுர சேனாநாயக்க கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அனுர சேனாநாயக்கவின் உடல் நிலை நன்றாகவே காணப்படுகின்றது தெரிவிக்கப்படுகிறது. அனுரவை சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். எனவே சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து அனுரவிற்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை. அனுர சேனாநாயக்கவிற்கு…

Read More

அனுர சேனநாயக்கவிடம் தீவிர விசாரணை

– எம்.எப்.எம்.பஸீர் – பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில்  மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அனுர சேனநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினர் நேற்று (19) இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று முன்தினம்  முதல் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை விசாரணை  செய்யும் நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகரவின் கீழான சிறப்புக்…

Read More

போக்­கு­வ­ரத்து பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் நாலரை மணி நேரம் சி.ஐ.டி. சிறப்பு விசா­ரணை

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பான விவ­கா­ரத்தில் நேற்று (4) போக்குவரத்து மற்றும் வீதிப் பாது­காப்புத் துறைக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம­ர­சிறி சேனா­ரத்ன குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் விசேட விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட்டார். அவ­ரிடம் நான்­க­ரை­ ம­ணி­நேரம் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் விக்கி­ர­ம­சே­கர தலை­மை­யி­லான குழு­வினர் சிறப்பு விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுத்து வாக்குமூலம் ஒன்­றினை பதிவுசெய்­து­கொண்­ட­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார். பிரதிப்…

Read More

தாஜூதீன் கொலை: அரச சாட்சியாளராக முன்னாள் பொலிஸ் அதிகாரி

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை வழக்கு விசாரணையில் அரச சாட்சியாளராக மாற இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இணக்கம் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு அரசாங்க பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, விசாரணை அதிகாரிகளிடம் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இன்னும் பொலிஸ் தரப்பு தமது முடிவை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ்…

Read More

தாஜுதீன் கொலை : முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை  தொடர்பிலான  ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின்  முன்னாள்  பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

தாஜுதீனின் கொலையாளிகள் விரைவில் கைது!

லஞ்ச, ஊழல் தொடர்பில் பலர் இன்று (11) கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகாரம் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் றக்பி வீரர் வசிம் தாஜுதீன் மரணம் தொடர்பில் முக்கிய பிரபலங்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முக்கிய பலர்…

Read More

வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். விசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்களின் தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உறுதியாக ஆதாரங்கள் காணப்படும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணைகளை…

Read More

தாஜூடின் கொலை: சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாஜூடினின் மரணமானது கொலையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை வெளிநாடு ஒன்று அனுப்பி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து…

Read More

வசீம் தாஜூதின் கொலை, சர்வதேச உதவியை நாடவேண்டும் – கொழும்பு பல்கலைகழகம்

வசீம் தாஜூதினின் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும் என கொழும்பு பல்கலைகழகம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. வசீம் தாஜூதினின் உயிரிழப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் திரட்டப்பட்ட சீ.சீ.டி.வி காணொளிகள் ஆய்விற்காக கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டடிருந்தது. எனினும் சீ.சீ.டி.வி காணொளிகளில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த வாகனங்களின் இலக்கங்களையும் அதில் காணப்படும் நபர்களையும் அடையாளம் காணமுடியாத நிலை காணணப்படுவதாக பல்கலைகழகத்தினர் நீதிமன்றில் குறிப்பிட்டள்ளனர்.

Read More