Headlines

முன்னாள் மேலதிக நீதவானுக்கான பிணை இடைநிறுத்தம்

கொழும்பு மேலதிக நீதமன்றத்தின் முன்னாள் மேலதிக நீதவான்  திலின கமகேவுக்கு, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தினால்  வழங்கப்பட்டுள்ள பிணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வழக்கப்பட்ட விளக்கமறியலை இல்லாதொழிக்க கூடாது என்று சட்டமா அதிபர், திருத்திய விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே, மேல் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

Read More

சி.ஐ.டியில் திலின கமகே ஆஜர்

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே, குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளார். திலின கமகே, இன்றைய தினம் (07) குற்றப்புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம்  விடுத்த உத்தரவின் பேரில் அவர் இன்று சி.ஐ.டியில் ஆஜரானார்.

Read More